ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தேவயானி. அதையடுத்து சின்னத்திரைக்கும் வந்து கோலங்கள், மஞ்சள் மகிமை, கொடிமுல்லை, முத்தாரம் போன்ற தொடர்களிலும் டைட்டீல் ரோல்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது சகாப்தம், பிளாக் அண்ட் ஒயிட் உள்பட சில படங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்கிறார். இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் தேவயானி டீச்சர் வேலை பார்ப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதனால் நடிப்புக்கு தேவயானி முழுக்குப்போட்டு விட்டதாக கோடம்பாக்கத்தில் செய்தி பரவியுள்ளது. அதனால் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பதைப்பற்றி அறிய தேவயானியை நேற்று தொடர்பு கொண்டபோது, அவர் இன்றுதான், மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பிஏ படிப்பதற்கான அப்ளிகேஷன் வாங்க சென்றிருக்கிறார் என்று அவரது கணவரும், டைரக்டருமான ராஜகுமாரன் தெரிவித்தார்.
அதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, தேவயானிக்கு ஆசிரியர் வேலை மீது அதிக ஈடுபாடு உண்டு. அதனால்தான், சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் வேலைக்கு சென்றார். ஆனால் அது நிரந்தர வேலையில்லை. ஒரு ஆசிரியைக்கு உடலநிலை சரியில்லாமல் லீவு போட்டிருந்ததால் அந்த லீவு நாட்களில் மட்டும் தேவயானி டீச்சராக பணியாற்றினார். அதற்காக அவர் 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றார். மேலும், இதைத் தொடர்ந்து, அவருக்கு மேலும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டிருப்பதால், தற்போது ஓபன் யுனிவர்சிட்டி மூலம் பிஏ படிப்பதற்காக மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் அப்ளிகேஷன் வாங்கியுள்ளார்.