தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெங்களூரில் இஞ்சினியரிங் படித்துக்கொண்டிருந்தவர் ஆர்யாவின் தம்பி சத்யா. அப்போது, ஆர்யாவிடம் கதை சொல்லச்சென்ற சில டைரக்டர்கள் ஹீரோ மாதிரி இருக்கிறாரே இவரை எப்ப நடிக்க வைக்கப்போறீங்க என்று யதார்த்தமாக ஆர்யாவிடம் கேட்கப்போக, நானும் சினிமாவில் நடிப்பேன் என்று வீட்டிற்குள்ளேயே கொடி பிடித்திருக்கிறார் சத்யா.
சினிமா ரொம்ப ரிஸ்க். இங்கு ஜெயிப்பது ரொம்ப கடினம் என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் சத்யா கேட்கவில்லையாம். அதனால்தான், புத்தகம் படத்தில் தம்பியை ஹீரோவாக இறங்கி விட்டார் ஆர்யா. அந்தபடம் தோல்வியடைந்ததால் அடுத்து சத்யாவை வைத்து யாரும படம் பண்ண முன்வராதபோது, அமரகாவியம் படத்தை தானே சொந்தமாக தயாரித்தார் ஆர்யா.
ஆனால் அந்த படமும் தோல்வியடைந்ததோடு, அதில் சத்யாவுக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை மியா ஜார்ஜின் நடிப்பே பேசப்பட்டது. அதனால் படம் மட்டுமின்றி, நடிப்பிலும் சத்யா தோற்றுபபோனார். இருப்பினும், இனிமேல் நடிக்கிற படங்களில் அப்படி சொதப்பி விடக்கூடாது என்று கைவசமுள்ள சென்னை சிங்கப்பூர் உள்ளிட்ட படங்களில் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறாராம் சத்யா.