Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தற்கொலை செய்து கொள்வேன்...ராம்கோபால் வர்மா தரும் அதிர்ச்சி...

07 டிச, 2014 - 10:35 IST
எழுத்தின் அளவு:

செய்திக்கே செய்தித தருபவர் திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா. அடிக்கடி ஏதாவது ஒரு புத்தம் புது செய்திகளை தந்து கொண்டேயிருப்பார். அதுவும் அனையனைத்தும் சர்ச்சைக்குரிய செய்திகளாகவே இருக்கும். கடந்த சில மாதங்களாகவே எதையாவது ஒன்றைச் சொல்லி அவர் செய்திகளில் தவறாமல் இடம் பிடித்து வருகிறார். கடைசியாக டெம்பர் படத்தினைப் பற்றி கமெண்ட் அடித்து பரபரப்பாகப் பேசப்பட்டார்.


சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் மரணத்தைப் பற்றி அவர் பேசி அதிர்ச்சி ஒன்றை அளித்திருக்கிறார். “நான் படுக்கையில் விழுந்துவிட்டாலோ, அல்லது அடுத்தவர் தயவால்தான் வாழ வேண்டும் என்ற நிலை வந்தாலோ, எந்த யோசனையும் இல்லாமல் தற்கொலை செய்து கொள்வேன். உடல் நலம் குன்றுவதை நான் வெறுக்கிறேன். அடுத்தவர்கள் என்னைப் பார்த்துக் கொள்ளும் நிலையையும் வெறுக்கிறேன்.


என்னுடைய மரணத்தைப் பற்றி எனக்கு முன்பே தெரிந்தாலோ அல்லது இன்னும் சில மாதங்களில் நான் இறந்து விடுவேன் என்ற நிலை வந்தாலோ நான் எங்காவது காணாமல் போய்விடுவேன். தனிமையில்தான் நான் இறப்பேன். என்னுடைய உயிரற்ற உடலை யாரும் பார்ப்பதை நான் விரும்பமாட்டேன். யாருக்கும் அந்த வாய்ப்பையும் கொடுக்க மாட்டேன்.


எனது உயிரற்ற உடலுக்கு எந்த சக்தியும் இருக்காது. அப்படி சக்தியற்ற எனது உடலை மற்றவர்கள் பார்க்க நான் அனுமதிக்க மாட்டேன். மரணத்திற்குப் பின் நாம் கடவுளிடம் செல்கிறோம் என்று சொன்னால் எதற்காக மரணத்திற்காக அழ வேண்டும். எப்படி ஒரு பிறந்தால் நாம் மகிழ்ச்சியடைகிறோமோ அதே போல் அதற்குச் சமமாக ஒருவரின் மரணத்தின் போதும் மகிழ்ச்சியடைய வேண்டும்.


ஒருவர் இறந்து விட்டால் அவரை நாம் உடல் அதாவது பாடி என்றுதான் அழைக்கிறோம். அவரது பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. மரணத்திற்குப் பின் அவர் எங்கே போனார் என்று யாருமே விளக்குவதில்லை. யாருடைய மரணத்திற்கும் நான் அழுததில்லை. எனது தந்தை இறந்த போது கூட நான் அழவில்லை. அவருடைய எண்ணங்கள் என்னிடம் மாறியதாகவே நான் உணர்கிறேன். ஆகவே, மரணம் என்பது உடலுக்கு மட்டும்தானே தவிர மனிதர்களுக்கு அல்ல,” என மரணத்தைப் பற்றி மிகவும் தத்துவார்த்தமாகச் சொல்லியிருக்கிறார் ராம்கோபால் வர்மா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in