தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
செய்திக்கே செய்தித தருபவர் திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா. அடிக்கடி ஏதாவது ஒரு புத்தம் புது செய்திகளை தந்து கொண்டேயிருப்பார். அதுவும் அனையனைத்தும் சர்ச்சைக்குரிய செய்திகளாகவே இருக்கும். கடந்த சில மாதங்களாகவே எதையாவது ஒன்றைச் சொல்லி அவர் செய்திகளில் தவறாமல் இடம் பிடித்து வருகிறார். கடைசியாக டெம்பர் படத்தினைப் பற்றி கமெண்ட் அடித்து பரபரப்பாகப் பேசப்பட்டார்.
சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் மரணத்தைப் பற்றி அவர் பேசி அதிர்ச்சி ஒன்றை அளித்திருக்கிறார். “நான் படுக்கையில் விழுந்துவிட்டாலோ, அல்லது அடுத்தவர் தயவால்தான் வாழ வேண்டும் என்ற நிலை வந்தாலோ, எந்த யோசனையும் இல்லாமல் தற்கொலை செய்து கொள்வேன். உடல் நலம் குன்றுவதை நான் வெறுக்கிறேன். அடுத்தவர்கள் என்னைப் பார்த்துக் கொள்ளும் நிலையையும் வெறுக்கிறேன்.
என்னுடைய மரணத்தைப் பற்றி எனக்கு முன்பே தெரிந்தாலோ அல்லது இன்னும் சில மாதங்களில் நான் இறந்து விடுவேன் என்ற நிலை வந்தாலோ நான் எங்காவது காணாமல் போய்விடுவேன். தனிமையில்தான் நான் இறப்பேன். என்னுடைய உயிரற்ற உடலை யாரும் பார்ப்பதை நான் விரும்பமாட்டேன். யாருக்கும் அந்த வாய்ப்பையும் கொடுக்க மாட்டேன்.
எனது உயிரற்ற உடலுக்கு எந்த சக்தியும் இருக்காது. அப்படி சக்தியற்ற எனது உடலை மற்றவர்கள் பார்க்க நான் அனுமதிக்க மாட்டேன். மரணத்திற்குப் பின் நாம் கடவுளிடம் செல்கிறோம் என்று சொன்னால் எதற்காக மரணத்திற்காக அழ வேண்டும். எப்படி ஒரு பிறந்தால் நாம் மகிழ்ச்சியடைகிறோமோ அதே போல் அதற்குச் சமமாக ஒருவரின் மரணத்தின் போதும் மகிழ்ச்சியடைய வேண்டும்.