இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், தன் அனுமதி இன்றி, பாடல்களை திருடி விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை கோரி, இசையமைப்பாளர் இளையராஜா, போலீசில் புகார் அளித்தார். இளையராஜாவின் சட்ட முகவர் பிரதீப்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் மனு அளித்தார். அதன் விவரம்: நாற்பது ஆண்டுகளாக, திரையுலகில் இசையமைப்பாளராக இருந்து வருகிறேன். நான் இசையமைத்த பாடல்களை, என் அனுமதியின்றி, சி.டி., மற்றும் இதர பதிவுகளாக வெளியிடக் கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளேன். அது, இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இந்த தடையாணையை மதிக்காமல், பி.நரசிம்மன் அகி மியூசிக் பி.லிமிடெட், அகிலன் லட்சுமணன், கிரி டிரேடிங் கம்பெனியை சேர்ந்த அபிஷேக் ரங்கநாதன் ஆகியோர், சட்ட விரோதமாக, என் பாடல்களை சி.டி.,க்களாக பதிவு செய்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும், கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு, நான் எவ்வித அனுமதியும் தரவில்லை. மலேசியாவில் இருந்து சென்னை வந்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.