தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குருவி படத்தை தயாரித்ததன் மூலம் படத்தயாரிப்பில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெயன்ட் மூவிஸ் பேனரில் ஆரம்பத்தில் நிறைய வெளிப்படங்களைத் தயாரித்தார். அதோடு, மைனா உட்பட பல படங்களை வெளியிட்டும் வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு, மற்ற ஹீரோக்கள் படங்களை தயாரிப்பதையே நிறுத்திவிட்டார். தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் நண்பேன்டா படத்தின் ஹீரோவும் உதயநிதிதான். இப்படத்தை வெளியிட்ட பிறகு மீண்டும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் மற்ற ஹீரோக்ககளின் படங்களை தயாரிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் உதயநிதி. கயல் படத்தைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கவிருக்கும் புதிய படமொன்றை தயாரிக்க உள்ளது ரெட் ஜெயன்ட் நிறுவனம். இந்தப் படத்தை தயாரித்த பிறகு சந்தானம் இயக்கத்தில் உதயநிதி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
உதயநிதிக்காக சந்தானம் ஒரு கதையை உருவாக்கி வைத்திருக்கிறாராம். தற்போது நடித்து வரும் படங்கள் முடிவடைந்ததும் சந்தானத்தின் கதையை கேட்கவிருக்கிறார் உதயநிதி. கதை ஓ.கே.யானால் விரைவில் சந்தானத்தின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.