டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு என்பது அதிமாகி வருகிறது. பெரிய நடிகர்களின் படங்களில் இருந்து மீடியம் பட்ஜெட் நடிகர்களின் படம் வரை இது தொடர்கிறது. சமீபத்தில் அந்த சர்ச்சையில் சிக்கியிருப்பது ரஜினிகாந்தின் லிங்கா படம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி இரண்டு வேடத்தில் நடித்துள்ள இப்படம், ஷூட்டிங் எல்லாம் முடிந்து வருகிற டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாள் அன்று ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர் மதுரை, ஐகோர்ட் கிளையில் லிங்கா படத்தின் கதை என்னுடையது என்று கூறி வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார், பொன்குமரன் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதி இவ்வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி வேணுகோபால் உத்தரவிட்டார். இதனையடுத்து லிங்கா படத்திற்கு தடை நீங்கியது என்று படக்குழுவினர் பெருமூச்சு விட்டநிலையில், இப்போது சென்னையை சேர்ந்த சக்திவேல் என்பவர் லிங்கா படத்தின் கதை என்னுடையது என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, 2009ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் பட்டம் பெற்றேன். படிக்கும்போதே சினிமா கதாசிரியர் பி.என்.சி.கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றினேன். அப்போது முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிக்குக்கின் வாழ்க்கையை படமாக்க ''உயிர் அணை'' என்ற பெயரில் கதை எழுதினேன். இந்த தலைப்பை 2012ம் ஆண்டு கில்டில் பதிவும் செய்தேன். மேலும் இந்த கதையை சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடமும் கூறினேன். இதை படமாக்க வேண்டுமானாலும் நிறைய தயாரிப்பு செலவாகும் என்று கூறி யாரும் படத்தை எடுக்க முன்வரவில்லை. அதேசமயம் கடந்த நவ.19ம் தேதி தென்னிந்திய திரைப்பட கதாசிரியர்கள் சங்கத்திலும் எனது கதையை பதிவு செய்தேன்.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்திருக்கும் லிங்கா படத்தின் கதை முல்லை பெரியாறு மற்றும் பென்னி குக்கின் வாழ்க்கை தொடர்பான கதை என்பதை செய்திதாள்களில் படித்து தெரிந்து கொண்டேன். மேலும் மதுரையை சேர்ந்த ஒருவரும் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்ததையும் அறிந்தேன். எனது ''உயிர் அணை'' என்ற கதையை தான் லிங்கா படமாக இயக்கியுள்ளனர். லிங்கா திரைப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது. எனவே, என்னுடைய கதையை கொண்ட லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, லிங்கா இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கதாசிரியர் பொன்குமரன், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு வருகிற 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இன்னும் எத்தனை பேர் இதுபோன்று கிளம்ப போகிறார்களோ...!!