ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை கஜோல் மற்றும் இயக்குனர் ஆதித்யா சோப்ராவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வந்த தகவல், உண்மைக்கு புறம்பானது என்றும், அவர்களது நட்பு சிறந்த முறையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜோல் நடித்த தில்வாலே துல்ஹனியா ல ஜாயேங்கே, திரைப்படம், 1000மாவது வார கொண்டாட்டத்தை கொண்டாடி வருகிறது. இதுதொடர்பான நிகழ்ச்சிகள் பல நடந்த நிலையில், இதில் பங்கேற்க, கஜோலிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அப்பட இயக்குனர் ஆதித்யா சோப்ராவிற்கும், கஜோலிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகவே, கஜோலிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் பரவின. கஜோலும், இதை மெய்ப்பிக்கும் விதமாகவே நடந்து கொண்டார். இந்நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஷாரூக்கானின் மத்தியஸ்தத்திற்கு பிறகு, கஜோலுக்கும், ஆதித்யாவிற்கும் இடையே இருந்த மனக்கசப்பு அகன்றதாகவும், தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்தின் 1000மாவது வார வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சியில், கஜோல் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.