தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு என்ற பாடலை பாடி நடித்த தனுஷ், அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உம் மேல ஆசைதான் என்ற பாடலை கார்த்திக்கிற்காக பாடினார். அந்த இரண்டு பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது.
அதையடுத்து 3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி பாடல் தனுஷின் இசை கேரியரையே மாற்றிப்போட்டது. அதனால் தற்போது கவனிக்கப்படும் நடிகராக மட்டுமின்றி, பாடகராக, பாடலாசிரியராக கோலிவுட்டில் வலம் வருகிறார். இந்நிலையில், வேலையில்லா படடதாரி படத்தில் அவர் பாடிய வாட்ய கருவாட் என்ற பாடல் ஹிட்டானது. குறிப்பாக தனுஷ் ரசிகர்களை ஏகோபித்த வரவேற்பினை பெற்றது.
இந்த நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள அனேகன் படத்தில் பல பாடல்கள் இடம்பெற்றபோதும், டங்காமாரி என்ற கானா பாடலை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார் தனுஷ். காரணம், அந்த படத்தில் பல வெரைட்டியான பாடல்களை ஹாரிஸ்ஜெயராஜ் கொடுத்தபோதும், இந்த பாடலுக்குத்தான் தனுஷின் ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளார்களாம்.
இணையதளங்களில் நாளுக்கு நாள் அந்த பாடலுக்கான லைக்கிங் அதிகரித்துக்கொண்டே வருவதால், அனேகன் படத்தின் வெற்றிக்கு இந்த ஒரு டங்காமாரி பாட்டே போதும் என்கிறாராம் தனுஷ்.