‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கனவுகள் இல்லாத வாழ்க்கை இல்லை என்று சொல்லுமளவிற்கு நம் அனைவரின் வாழ்விலும் தினமும் இல்லையென்றாலும் அவ்வப்போது கனவுகள் வந்து கொண்டேயிருக்கும். அவற்றில் பல கனவுகள் நம்ப முடியாதவையாகவும், இப்படியெல்லாம் கூட நடக்குமா என்றெல்லாமும் யோசிக்க வைக்கும். தமன்னாவிற்கும் அப்படித்தான் ஒரு பயங்கரக் கனவு அடிக்கடி வருகிறதாம். அதாவது அந்தக் கனவு 'தலை' போகிற ஒரு கனவாக இருக்கிறதாம்.
அவருடைய கனவில் அவருடைய தலைமுடி வெள்ளையாகி விடுவது போலவும், அவருக்குத் தலையில் குறைவான முடியே இருப்பது போலவும் கனவு அடிக்கடி வருகிறதாம். இன்னும் 30 வயதைக் கூடத் தாண்டவில்லை, அதற்குள் இப்படிப்பட்ட கனவு வருகிறதே என்று தமன்னா கவலைப்படுகிறாராம். அப்படி ஒரு கனவு வரும் போதெல்லாம் தமன்னா மிகவும் தவித்துப் போய்விடுகிறாராம். ஒரு பெண்ணின் அழகில் நீளமான தலைமுடிக்கும் முக்கிய பங்கு உண்டு என்கிறார் தமன்னா.
30வயதைக் கடந்த பின் எந்த நாயகிக்காகவும் யாருமே கதையை உருவாக்குவதில்லை. எப்போது 20 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்காகத்தான் அனைவருமே கதையை உருவாக்குகிறார்கள். அதனால், நாயகிகளும் 30 வயதைக் கடந்த பிறகு திருமணத்தைப் பற்றி யோசிக்கிறார்களே தவிர அவர்களுடைய வாய்ப்பைப் பற்றி யோசிப்பதேயில்லை என்கிறார் தமன்னா.
அவருடைய இந்த வருத்தம் நியாயமற்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஐஸ்வர்யா ராயும், அனுஷ்காவும் 30 வயதைக் கடந்த பிறகுதான் அதிகமாகவே புகழ் பெற்றார்கள்.