தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிம்பு அவருடைய மூன்று காதலைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவருடைய இரண்டு காதல் பற்றியும், அந்த இரண்டு காதலிகள் அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஏனென்றால் அவர்களிருவருமே திரைப்பட நடிகைகள்தான். 'வல்லவன்' பட சமயத்தில் நயன்தாராவைக் காதலித்த சிம்பு சீக்கிரமே அவரை விட்டுப் பிரிந்துவிட்டார். அதன் பின் சமீபத்தில் 'வாலு' படப்பிடிப்பில் ஹன்சிகாவைக் காதலிப்பதாக அறிவித்தவர் திடீரென அவரை விட்டும் பிரிந்துவிட்டார். சிம்புவின் இந்த இரண்டு காதல் தோல்விகளும் அவரை நிறையவே பாதித்துவிட்டது, அவரை மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், சிம்பு இதுவரை வெளிப்படையாகச் சொல்லாத அவருடைய மூன்றாவது காதலும் ஒன்று இருக்கிறதாம். ஆனால், அந்தக் காதல்தான் அவருடைய முதல் காதல் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
மூன்று காதலிலும் தோல்வியடைந்ததைப் பற்றி அவர் என்ன சொல்கிறார். “எனக்கு இதுவரை மூன்று காதல்கள் வந்து போய்விட்டன. ஆனால், எந்த காதலும் நிரந்தரமாக இல்லாமல் போய்விட்டது. எனது தங்கையின் திருமணத்திற்குப் பிறகு எனது திருமணம் நடக்கும் என்று சொல்லியிருந்தேன். அந்தச் சமயத்தில் என்னுடன் ஒரு பெண் இருந்தாள். ஆனால், இப்போது அவள் யாரோ, நான் யாரோ... இப்போது எனக்கு காதல் என்றாலே போரடித்துவிட்டது. ஆனாலும், காதலை நான் காதலிக்கிறேன்.
ஒவ்வொரு காதலுமே என் கூட கடைசி வரைக்கும் வரணும்னு நினைச்சேன். எவ்வளவு வேணும்னாலும் காதலிக்கலாம், ஆனால் காதலிக்கிறவங்க வாழ்க்கையில ஒண்ணு சேர முடியாதுங்கற எண்ணம் எனக்கு வந்துடுச்சி. என்னோட காதல் தோல்விகள்தான் என்னைக் பக்குவப்படுத்தியிருக்கு,” என ஒரு தத்துவஞானி போலவே பேசுகிறார் சிம்பு.