அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் மணிரத்னம். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய படங்கள் பெரும் தோல்வியை தழுவி வருகிறது. பிரமாண்டமாக அவர் இயக்கி தயாரித்த ராவணன், மீடியம் பட்ஜெட்டில் தயாரித்த கடல் போன்றவை சமீபத்திய தோல்விகள். அதனால் சிம்பிளாக, விரைவாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் மணிரத்னம்.
எந்த விளம்பரமும் இல்லாமல், ஆர்ப்பாட்டமும் இல்லாமல், படம் பற்றிய தகவல்கள் எதுவும் கசியாமல் அழகான ஒரு காதல் படத்தை எடுத்து தனது படைப்பாற்றலை மீண்டும் நிரூபிப்பதோடு, விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்தப் படம் இருக்க வேண்டும் என்ற அவர் முடிவு செய்தார். இதற்காக எந்த அறிவிப்பும் இன்றி சில மாதங்களுக்கு முன்பாகவே தனது படப்பிடிப்பை துவங்கி விட்டார்.
படத்தில் மம்முட்டி மகன் துல்கர்சல்மான் ஹீரோவாக நடிக்கிறார், நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார், பிரகாஷ் ராஜ் வில்லன், பைவ் ஸ்டார் கனிகா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் ஓகே கண்மணி. இது மணியின் கட்டுப்பாடுகளை மீறி கசிந்த தகவல்கள்.
இப்போது அவர் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்து விட்டு படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது. எந்த கலப்பும் இல்லாத, அக்மார்க் காதல் கதையாம். இன்றைய இளைஞர்களின் உள்ளத்தை உருக்கும் விதமாக இதனை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு மாதத்திற்குள் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.