சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் |
ஐயா படத்தில் தமிழுக்கு வந்த நயன்தாரா, இப்போதுவரை கோலிவுட்டில் உள்ள பல முன்னணி ஹீரோக்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதோடு, ஏற்கனவே அவருடன் நடித்தவர்கள்கூட மீண்டும் மீண்டும் நடிக்க ஆசைப்படுகின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்களைப்போலவே, நடிகர்களையும் தனது வசீகரத்தால் ஈர்த்து வைத்திருக்கிறார் நயன்தாரா.
அப்படி நயன்தாராவின் நடிப்பு, அழகால் கவரப்பட்ட நடிகர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர். மேலும், இதுவரை தனது படங்களில் பிரபலமில்லாத காயத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா போன்ற நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பவர், இப்போது முதன்முறையாக முன்னணி ஹீரோயின் நயன்தாராவுடன் இணைந்திருக்கிறார்.
அந்த வகையில், விஜய்சேதுபதி-நயன்தாரா இணைந்து நடித்து வரும் நானும் ரெளடிதான் படப்பிடிப்பு கடந்த மாதமே நடைபெற இருந்தது. ஆனால், விஜயசேதுபதி வேறு படங்களில பிசியாக இருந்ததால், நேற்று முதல் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறர்கள். முதல்கட்டமாக சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் படப்பிடிபபு, 7-ம் தேதிக்கு பிறகு பாண்டிச்சேரியில் நடக்கிறதாம்.
அப்போது, விஜய்சேதுபதி - நயன்தாரா சம்ந்தப்பட்ட வசன காட்சிகள் அங்குள்ள கடற்கரை ஏரியாவில் படமாக்கப்படுகிறதாம். அதைத் தொடர்ந்து வில்லன் கோஷ்டியுடன் விஜயசேதுபதி மோதும் ஆக்சன் காட்சிகளும் படமாகிறதாம்.