தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் ''என்னை அறிந்தால்'' படம் கடந்த தீபாவளிக்கே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜீத் இரண்டு விதமான கெட்டப், பாடி லாங்குவேஜ் என தன்னை மாற்றி நடிப்பதால் அதிக காலஅவகாசம் தேவைப்படுகிறது என்று அப்போது சொன்ன கெளதம் மேனன், பொங்கலுக்கு படம் கண்டிப்பாக வந்து விடும் என்றார்.
அதையடுத்து, அதற்கான வேலைகளும் தடபுடலாக நடந்து வந்தது. ஆரம்பத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடத்தியவர்கள், பின்னர் பாடல் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கு வெளிநாடுகளுக்கு சென்றனர். அதைத் தொடர்ந்து இப்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே, போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளும் நடக்கிறது.
சமீபத்தில் அப்படத்தில் கேரக்டர் ரோல்களில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள், வில்லன்களுக்கான டப்பிங் பணிகள் நடைபெற்றது. ஆனால், அஜீத் மற்றும் த்ரிஷா, அனுஷ்கா சம்பந்தப்பட்ட டப்பிங் வேலைகள் இன்னும் நடைபெறவில்லையாம். அதோடு, படப்பிடிப்பு இதுவரை 80 சதவிகிதம்தான் முடிவடைந்திருப்பதாக அந்த படக்குழுவைச் சேர்ந்தவர்கள் தகவல் தருகிறார்கள்.
அதோடு, என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு கண்டிப்பாக திரைக்கு வந்து விடும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வரும் நிலையில், படப்பிடிப்பே இன்னும் நடைபெற வேண்டியிருப்பதால், பொங்கலுக்கு படம் திரைக்கு வருவது டவுட்தான் என்கிறார்கள்.