சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
சமீபத்தில், காங்கிரசில் இணைந்த, நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர்.சி மீது, பட அதிபர் ஒருவர், கதை திருட்டு மற்றும் பண மோசடி புகார் அளித்து உள்ளார்.
சென்னை அடையாறு, இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துராமன், 76. சிவாஜி, ரஜினி உட்பட, முக்கிய நடிகர்களை வைத்து, 26க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து உள்ளார். அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எம்.எம்., கம்பைன்ஸ் என்ற பெயரில், திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். தயாரிப்பாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினர். என் தயாரிப்பில், ரஜினி நடித்த, ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படத்தை, 2013ல், ரீமேக் செய்ய முடிவு செய்து, இயக்குனர் செல்வகுமாருக்கு, 25 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து, ஏழு கோடி ரூபாயில் படம் தயாரிப்பது என, ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது, எம்.எஸ்.விஷன் ஐ மீடியா நிறுவனத்தை சேர்ந்த, தினேஷ் கார்த்திக், இயக்குனர் சுந்தர்.சி., ஆகியோர், என் படத்தின் கதையை திருடி, அரண்மனை என்ற பெயரில், புதிய படம் எடுத்து வருவதாக அறிந்தேன். அதுப்பற்றி, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தேன். இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முன்னிலையில், 50 லட்சம் ரூபாய்; இந்தி மற்றும் தெலுங்கு மொழி பட விற்பனையில், தலா, 25 சதவீதம் தருவதாக தெரிவித்தனர். படம் வெளியாகி, பல கோடி ரூபாயை சம்பாதித்த பின், கொலை மிரட்டல் விடுப்பதுடன், பணம் தராமல் மோசடி செய்து வருகின்றனர். அவர்களால், என் உயிருக்கு ஆபத்து உள்ளது. இவ்வாறு, புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த புகார் மனு குறித்து, மத்திய குற்றப்பிரிவு, 2ம் அணி, இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ் விசாரித்த வருகிறார். புகார்தாரிடம் போதிய ஆவணங்கள் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார்.
- நமது நிருபர் -