Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நடிகர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.... அமலா பேட்டி!

04 டிச, 2014 - 00:47 IST
எழுத்தின் அளவு:

1980களில், தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு நாயகியாக திகழ்ந்தவர்களில், அமலாவுக்கு


முக்கிய இடம் உண்டு. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் முடித்து, ஐதராபாத்தில், செட்டிலான அமலா, தற்போது சின்னத் திரை மூலம் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார். காலச் சக்கரங்கள் உருண்டோடியதற்கு அடையாளமாக, அமலாவின் முகத்தில் முதுமையின் பதிவுகள் சற்றே தென்படுகின்றன. ஆனாலும், அதே ஹஸ்கி வாய்ஸ், அதே உற்சாகம் என, அதே அமலா தான். அவருடன் பேசியபோது...


* நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் நடிக்க வந்துள்ளது பற்றி...?


கிட்டத்தட்ட, 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் கேமராவுக்கு முன் வந்து நிற்கிறேன். கொஞ்சம் டென்ஷன் இருந்தது. உயிர்மெய் என்ற சீரியலின் கதை பிடித்திருந்ததால், நடிக்க சம்மதித்தேன். 10 எபிசோட் வரை கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. பின், இயல்பு நிலைக்கு திரும்பி விட்டேன்.


* இந்த சீரியலில் டாக்டராக நடிக்கிறீங்களே?


ஐதராபாத்தில், விலங்குகளுக்கான மருத்துவமனை நடத்துகிறேன். டாக்டர்களிடம், அவர்களின் தொழில் விஷயத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டேன். நோயாளிகளிடம் எப்படி நடந்து கொள்கின்றனர் என்ற விஷயத்தை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டேன். இதுபோன்ற விஷயங்கள் தான், டாக்டராக நடிப்பதற்கு கை கொடுத்தது.


* உங்க சினிமா பயணம்...?


எனக்கு எட்டு வயதாக இருக்கும்போது, தமிழகத்துக்கு வந்தேன்.


கலாஷேத்திராவில் சேர்ந்தபோது தான், தமிழை நன்றாக பேச கற்றுக் கொண்டேன். அதிலும், பாவாடை - சட்டை, பரத நாட்டியம், தமிழ் கலாசாரம் எல்லாவற்றையும் பார்த்த பின், அய்யோ, இது தான் வாழ்க்கை, இதைத் தான் வாழ வேண்டும் என, முடிவு செய்தேன். அப்போது தான், மைதிலி என்னை காதலி படத்தில் நடிக்க, டி.ராஜேந்தர் வாய்ப்பு அளித்தார். அதன்பின், என் வாழ்க்கை பயணமே மாறிவிட்டது. நடிகர், நடிகைகள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றே நினைக்கிறேன்.


* டி.ராஜேந்தரை பற்றி...?


மைதிலி என்னை காதலி படத்தில் நடிக்க வந்தபோது, நடிப்பு என்றால் என்ன என்பதே எனக்கு தெரியாது. டி.ஆர்., சார் தான் நடிக்க கற்றுக் கொடுத்தார். அதிலும், அழும் காட்சிகளில் ஏகப்பட்ட, டேக் வாங்குவேன். கிளிசரின் போட்டாலும், எனக்கு அழ வராது. ஒரு காட்சியில் பொறுமை இழந்த டி.ஆர்., கோபத்தில், காச் மூச் என, கத்தி விட்டார். அந்த பயத்திலேயே அழுது விட்டேன். அப்படியே படமாக்கி விட்டனர். காட்சி ஓ.கே.,யாகி விட்டது.


* உங்க கணவர் நாகார்ஜுனா மற்றும் குடும்பம் குறித்து...?


நகார்ஜுனா, இப்பவும் பிசியாகவே இருக்கிறார். சினிமா, டிவி ஷோ என, எப்போதும் ஒரே


பரபரப்பு தான். சென்னைக்கு ஷூட்டிங் வரும்போதெல்லாம், நீ எப்போ வீட்டுக்கு வருவே என, சின்ன பிள்ளை போல் கேட்பார். என் பசங்க இரண்டு பேரும் பெரிய ஆளாகிட்டாங்க. என் ஸ்டெப் சன் நாக சைதன்யா, சென்னையில் தான் வளந்தார், நல்லா தமிழ் பேசுவார்; திறைமை சாலி. என் இரண்டாவது மகன் அகில், சிறந்த கிரிக்கெட் பிளேயர். இப்போது, ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கப் போறான்.


* ஸ்ரீதேவி போன்ற பல நடிகைகள், தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்புறாங்களே...?


நம் நாட்டில் உள்ள மிகச் சிறந்த நடிகைகளில் ஸ்ரீதேவியும் ஒருவர். இதுபோன்ற திறமையான நடிகைகள் மீண்டும் நடிக்க வருவது, திரைத்துறைக்கு ஆரோக்கியமான விஷயம். என் மனதை தொடுவது போன்ற கதைகள் இருந்தால், மீண்டும் சினிமாவுக்கு வருவேன்.


* எதையாவது, மிஸ் பண்றதா நினைக்கிறீங்களா?


எனக்கு கடவுள் எல்லாமே கொடுத்திருக்கார். சின்ன வயதிலேயே, பெயர், புகழ், வெற்றி எல்லாம் பார்த்தாச்சு. மனதுக்கு பிடித்த கணவர், அன்பான குழந்தைகள் என, நிம்மதியாகவே இருக்கிறேன். காசு, பணத்துக்கு பிரச்னை இல்லை. நமக்கு இவ்வளவு கொடுத்துள்ள கடவுளுக்கு, நன்றிக் கடனாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே, 20 வருஷமாக, பல்வேறு சமூக சேவைகளில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன்.


* ஒரு நல்ல அம்மாவாக, குழந்தை வளர்ப்பு குறித்து ஏதாவது டிப்ஸ்...


இந்த காலத்து குழந்தைகளுக்கு பிரஷர் அதிகம். டாக்டராகணும், இன்ஜினியராகணும் என, வீட்டிலயே கசக்கி பிழிகின்றனர். எனக்கு என்னவோ, இது சரியானதாக தெரியவில்லை. இதனால், என் பையனுக்கு நான் எந்த நெருக்கடியும் கொடுக்க வில்லை. உன் மனதுக்கு என்ன பிடிக்கிறதோ, அதைச் செய்... என, முழு சுதந்திரம் கொடுத்து விட்டேன்.


இவ்வாறு நடிகை அமலா கூறியுள்ளார்


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in