'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திலீப், மஞ்சு வாரியர் பிரிவுக்கு நான் காரணம் இல்லை என நடிகை காவ்யா மாதவன் கூறியுள்ளார். மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான திலீப், 1998ம் ஆண்டு அப்போது முன்னணி நடிகையாக இருந்த மஞ்சு வாரியாரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு டீன் ஏஜ் வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.
கடந்த சில காலமாக திலீப்பும், மஞ்சு வாரியாரும் பிரிந்துதான் வாழ்கிறார்கள். சிறந்த டான்சரான மஞ்சு வாரியார் மீண்டும் நடனமாட வந்ததும், நடிக்க வந்ததும்தான் தம்பதிகளுக்கிடையே பிரிவை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. மலையாளத் திரையுலகமே ஆச்சரியத்தில் பார்த்து வந்த இந்த தம்பதியரின் பிரிவு, திரையுலகில் மட்டுமல்லாது, மக்களிடமும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனிடையே, திலீப் விவாகரத்து கோரி குடும்பநல கோர்ட்டில் விண்ணப்பித்துள்ளார்.
இதனிடையே திலீப்-மஞ்சுவாரியர் விவகாரத்திற்கு நடிகை காவ்யா மாதவன் தான் கரணம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. மலையாளத்தில் முன்னணி நடிகையான காவ்யா மாதவன் 2009ம் ஆண்டு திருமணமாகி, ஓராண்டுக்குள்ளாகவே விவாகரத்து பெற்று கணவரை விட்டு பிரிந்தார். இதனையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் நடிகர் திலீப்புடன் அவர் நெருக்கம் காட்டுவதாகவும், திலீப்பும், காவ்யாவும் காதலிப்பதாகவும் மலையாள சினிமாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் திலீப்பும், மஞ்சுவும் பிரிந்ததற்கு காவ்யா தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதனை காவ்யா முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து காவ்யா மாதவன் கூறியுள்ளதாவது, "ஏற்கெனவே பலமுறை நான் இந்த கேள்விக்கு பதில் கூறிவிட்டேன். அவர்கள் வீட்டில் நடக்கும் எல்லாவற்றுக்கும் நான்தான் பொறுப்பு என்பதா? இதுபோன்ற தவறான செய்திகளைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்," என்றார்.