ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'நண்பன்' படத்தின் நாயகியான இலியானா, தற்போது இந்திப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் இரண்டே இரண்டு படங்களிலும், தெலுங்கில் சில வெற்றிப் படங்களிலும் நடித்தவர், இந்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து பாலிவுட்டிலேயே தங்கி விட்டார். இந்தியில் நடிக்க ஆரம்பித்த பிறகு நடிகைகளிடம் பல மாற்றங்கள் வருவது சாதாரண விஷயம்தான். அவர்களுடைய உடை விஷயத்திலிருந்து, பேசுவது வரை எல்லாமே மும்பை கலாச்சாரத்திலேயே இருக்கும். நடிகைகளைப் பற்றி மும்பை மீடியாக்கள் வரம்பு மீறிக் கூட செய்திகளை வெளியிடுவது வழக்கம்தான். அவர்களுக்குத் தீனி போடும் வகையிலும் எதையாவது பேசினால் தான் மும்பை மீடியாக்கள் கண்டு கொள்வார்கள்.
அதற்கேற்ற விதத்தில் நேற்று ஒரு விவகாரமான கொஞ்சம் ஆபாசமான ஒரு பதிவை தன்னுடைய டுவிட்டர் வலைத்தளத்தில் ஷேர் செய்திருக்கிறார் இலியானா. அதில் இருப்பது என்னவென்றால், “எங்களது பிராவை, ஷர்ட் கை வழியாகக் கழற்றி அதை அறைக்குள் வீசுவதில் இருக்கும் மகிழ்ச்சியை ஆண்கள் எப்போதுமே அறிந்து கொள்வதில்லை,” என ஒரு பதிவை ஷேர் செய்திருக்கிறார். இலியானா எதற்காக இதைப் பதிவிட்டார் என்பது தெரியவில்லை. இலியானாவின் இந்த பதிவுதான் நேற்றிலிருந்து பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.