‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ்த் திரைப்படங்கள் மீது எப்போதுமே ஒரு கண்ணை வைத்திருக்கும் தெலுங்குத் திரையுலகத்தினர் இந்த முறை தமிழிலிருந்து தெலுங்கிற்கு மொழி மாற்றம் ஆகி வரும் பெரிய படங்களை தடுத்து நிறுத்தவும் முயற்சி செய்து வருகிறார்கள். பொங்கல் தினத்தன்று 'ஐ' படத்தின் தெலுங்கு மொழி மாற்றான 'மனோகரடு' படத்தை வெளியிட முடியாமல் தடுக்க வேண்டும் என சில தயாரிப்பாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்களாம். சமயங்களில் சில தமிழ்ப் படங்களால் நேரடித் தெலுங்குப் படங்கள் பாதிக்கப்படுவதால்தான் இப்படி ஒரு முடிவை எடுக்கிறார்கள் என டோலிவுட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பொங்கலன்று தெலுங்கில் வெங்கடேஷ், பவன் கல்யாண் நடிக்கும் 'கோபாலா கோபாலா' மற்றும் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் 'டெம்பர்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்களாம். அதனால் 'ஐ' படத்தை பொங்கலன்னு வெளியிடக் கூடாதென்றும், ஜனவரி மாதக் கடைசியிலோ, அல்லது பிப்ரவரி மாதத்திலோதான் வெளியிட வேண்டும் என்று சொல்லி வருகிறார்களாம். 'ஐ' படம் வெளியானால் அவர்களது படங்கள் பாதிக்கப்படும் என்றும் சொல்கிறார்களாம். அதனால் 'ஐ' படம் தெலுங்கில் திட்டமிட்டபடி வெளியிட முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
மேற்சொன்ன இரண்டு தெலுங்குப் படங்களையும் தயாரிப்பது மிகப் பெரிய தயாரிப்பாளர்கள் என்பதால் அவர்கள் நினைப்பது நடந்து விடும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாத நமது தயாரிப்பாளர்கள் தமிழ்ப் படங்களை தமிழ்நாட்டில் எடுப்பதை விட்டுவிட்டு, இன்னமும் தொடர்ந்து ஐதராபாத்திலேயே அதிகமாகப் படமாக்கி வருகிறார்கள் என இங்குள்ளவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 'லிங்கா' உட்பட பல படங்களின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடைபெறவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தில் உள்ள பல ஸ்டுடியோக்களில் தெலுங்குப் படங்களை விட தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புக்கள்தான் அதிகம் நடைபெற்று வருகிறது. அதனால் தமிழ்த் திரைப்பட தொழிலாளர்களுக்கு பணிபுரிய அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் இங்குள்ள தொழிலாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இனியாவது, நமது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.