ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'காதலர்கள்' என்று சொன்னால்தான் பிரச்னை, அதை விட மனம் கவர்ந்தவர்கள் என்று சொல்லிவிடலாமே. தங்களின் மனம் கவர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட 'காவியத் தலைவன்' படத்தை இரண்டு ஹீரோயின்கள் ஒரே நாளில் பாராட்டியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 'காவியத் தலைவன்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வருண் மணியனை அவருடைய மனம் கவர்ந்த நாயகியான த்ரிஷாவும், படத்தின் நாயகர்களில் ஒருவரான சித்தார்த்தை அவருடைய மனம் கவர்ந்த நாயகியான சமந்தாவும் பாராட்டியிருக்கிறார்கள்.
த்ரிஷா நேற்று மதியம் படத்தைப் பற்றி பாராட்டி அவருடைய மனம் கவர்ந்த வருண்மணியனை 'டேக்' செய்து டிவிட்டரில் வாழ்த்தைப் பதிவிட்டிருந்தார். “காவியத் தலைவன்', குழுவினரின் அற்புதமான முயற்சி. அற்புதமாக நடித்திருக்கிறார்கள். நல்ல படங்களை ரசிப்பவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். இப்படிப்பட்ட படத்திற்காக நன்றி, வருண் மணியன்,” என த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவில் 'காவியத் தலைவன்' படத்தைப் பற்றி ரன்னிங் கமெண்ட் கொடுத்திருக்கிறார் சமந்தா. “முதல் பாதி முடிவடைந்தது. மிகவும் பிரமிப்படைந்துள்ளேன். உணர்வுபூர்வமான படமாக உள்ளது. இரண்டாவது பாதியைப் பார்க்க ஆவலாக உள்ளேன். நடிப்பில் மிகவும் பிரமாதம்,” என முதலிலும், பின்னர் படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு, “காவியத் தலைவன் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும். தலைசிறந்த படம்,” என சமந்தா குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவர் த்ரிஷா, வருண்மணியனை 'டேக்' செய்தது போல, சித்தார்த்தை 'டேக்' செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது படத்திற்காக விஜய் வாழ்த்து தெரிவித்ததை விட, சமந்தா, த்ரிஷாவின் வாழ்த்துக்கள்தான் அவர்களின் மனம் கவர்ந்தவர்களுக்கு ஸ்பெஷலான வாழ்த்துக்களாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.