ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகளில், நாயகனுக்கும், நாயகிக்கும் சரியான 'கெமிஸ்ட்ரி' இருந்தால்தான், அப்படிப்பட்ட காட்சிகளை ரசிக்க முடியும். யாராவது ஒருவர் ஈடுபாட்டுடன் நடிக்கவில்லையென்றாலும், மொத்தக் காட்சியும் வீணாகப் போய்விடும்.ஆனால், இப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பது சாதாரண விஷயமில்லை என்கிறார் தமன்னா.
“காதல் காட்சிகளில் நடிப்பது சங்கடமான விஷயம்தான்.காதல் காட்சிகளை மிகவும் 'இன்டிமசி' ஆக இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அம்மாதிரியான காட்சிகளை ரசிப்பதற்குத்தான், திரையரங்கிற்கு ரசிகர்கள் வருகிறார்கள்.ஆனால், காதல் காட்சிகளில் நடிப்பது எளிதல்ல.
காதல் காட்சிகளில் நடிக்கும்போது, ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் இடையே சரியான கெமிஸ்ட்ரி இருக்க வேண்டும். அவர்களும், ஈடுபாட்டுடன் நடிக்க வேண்டும். நிஜமாகவே, அப்படித்தான் நடிக்கிறார்களோ என பலர் நினைப்பார்கள். நம்மைச்சுற்றி, பலர் நின்று கொண்டிருக்க, எரியும் விளக்குகளால் வெப்பம் அதிகமாக இருக்கும்போது, இயக்குனரோ,இன்னும் நல்லா நடிங்க, நல்லா நடிங்க என சொல்லும்போது, எப்படி நடிக்க முடியும். அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கும் போது சீக்கிரம் இந்தக்காட்சியை எடுத்து முடிக்கமாட்டார்களா என்றே தோன்றும்,” எனத்தெரிவித்திருக்கிறார்.