பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'கத்தி' படத்தில் விஜய் ஜோடியாக நடித்த சமந்தாவிற்கு அந்தப்படத்தில் நிறைவான காட்சிகள் இல்லையென்றாலும், அவர் நடித்த ஒரு தமிழ்ப்படம் வெற்றிப்படமாகி, அவரையும் தமிழில் ராசியான நடிகையாக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அதற்குமுன், சமந்தா நடித்த எந்த ஒரு தமிழ்ப்படமும் வெற்றிபெறவேயில்லை.'கத்தி' வெற்றியின் மூலம் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழிலும் முன்னணி ஹீரோயின்கள் வரிசையில் அவரும் இடம்பெற்றுவிட்டார்.
நேற்று நடைபெற்ற 'மேமுசைதம்' நிகழ்ச்சியில், விஜய்யுடன் நடித்த அனுபவத்தைப் பற்றி மகேஷ்பாபு சமந்தாவிடம்கேட்டார். அதற்குப்பதிலளித்தசமந்தா, “விஜய் சார் படப்பிடிப்பின் போது, இரண்டு மணிநேரம் சும்மா உட்கார்ந்திருங்கள் என்று சொன்னால்கூட அவர் யாருடனும் பேசாமல் உட்கார்ந்திருப்பார். ஆனால், ஷாட்ரெடி என்று சொன்னதும், அப்படி அமைதியாக உட்கார்ந்திருந்தவரா இப்படி நடிக்கிறார் என ஆச்சரியப்படுத்திவிடுவார். காமெடியாகட்டும், ஆக்ஷனாகட்டும் அவர் நடிப்பேதனி.நான் கூட அவர் ஒரு 'ஸ்பிலிட்பெர்சனாலிட்டி'யோ என்று கூட நினைப்பதுண்டு.அந்த அளவிற்கு, காமிராவுக்கு பின்ஒருமாதிரியும், காமிராவுக்கு முன் நடிகராக வேறுமாதிரியும் இருப்பார்.அப்படி ஒரு நடிகரை நான்பார்த்ததேயில்லை,” எனவிஜய்புகழ்பாடியிருக்கிறார்சமந்தா.