துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
சென்னை: நடிகர் ரஜினியின் மனைவி லதா மீது, தனியார் நிறுவன அதிபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதுகுறித்து, போலீஸ் வட்டாரத்தில் சிலர் கூறியதாவது:ரஜினி நடிப்பில், மே மாதம் வெளியானது, 'கோச்சடையான்' திரைப்படம்.இந்தப் படம் தொடர்பாக, தனியார் நிறுவன அதிபர் ஒருவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கோச்சடையான் படம் வெளியாகும் முன், நடிகர் ரஜினியின் மனைவி லதா மற்றும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் ஆகிய இருவரும், திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை தருவதாக, தன்னுடன் ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால், ஒப்பந்தத்தை மீறி, வெளியீட்டு உரிமையை வேறொருவருக்கு வழங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.அதனால், தன் உடனான ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, 10.2 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். அதைத்தர லதா ரஜினிகாந்த் மறுக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி உள்ளார்.இவ்வாறு, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
'லதா மீது புகார் கொடுக்கப்பட்டிருந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. முழுமையான விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும்' என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அதேநேரத்தில், லதாவுக்கு எதிராக மோசடி புகார் எதுவும் தரப்படவில்லை என்றும், சில போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், லதா மீதான பண மோசடி புகார் குறித்த செய்திகள் ஊடகங்கரில் வெளியானதால், கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.