டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் அந்த 7 நாட்கள் படமும் முக்கியமானது. அநத படத்தில் பாலக்காட்டு மாதவன் என்ற வேடத்தில் அவர் நடிததிருந்தார். தோளில் ஒரு ஆர்மோனியப்பெட்டியை தொங்க விட்டபடி, இசையமைப்பாளர் ஆக முய்றசி செய்பவராக நடித்தார். அவருக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார்.
கதைப்படி அப்படத்தில் பாக்யராஜின் காதலியான அம்பிகாவை, அப்படத்தில் டாக்டராக நடித்திருந்த ராஜேசுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால், முதலிரவு அறையில், தனது காதல் கதையை அவரிடம் அம்பிகா சொன்னதையடுத்து, அவரை காதலனுடனேயே இணைத்து வைக்க ராஜேஷ் முயற்சி எடுப்பார்.
இதில் ராஜேஷ் நடித்த வேடத்தில் நடிக்க முதலில் நடிகர் சிவகுமாரைத்தான் பாக்யராஜ் தொடர்பு கொண்டாராம். ஆனால், பாக்யராஜே அந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதால் தனக்கான வேடத்தை டம்மி பண்ணி விடுவார் என்று அப்போது நடிக்க மறுத்து விட்டாராம் சிவகுமார். ஆனால், அந்த 7 நாட்கள் படம் திரைக்கு வந்தபோது, ஒரு நல்ல வேடத்தை இழந்து விட்டேனே என்று ரொம்பவே பீல் பண்ணினாராம் சிவகுமார்.