ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, தெலுங்கிலும் புகழ் பெற்று ஹிந்தியிலும் நம்பர் 1 நடிகையாக விளங்கியவர் அந்த 'மயிலு' நடிகை. ஹிந்தியில் முன்னணி தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, இரண்டு மகள்களுக்குத் தாயாகி நடிப்பை விட்டே விலகியிருந்தார். சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்தார்.
தற்போது தளபதி நடிகருடன் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் மகாராணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் 'மயிலு'. படத்தில் நடிக்கும் இரண்டு முன்னணி இளம் ஹீரோயின்களை விட 'மயிலு' நடிகைக்குத்தான் சம்பளம் அதிகமாம். அதாவது இரண்டு ஹீரோயின்களின் சம்பளத்தைக் கூட்டினால் கூட 'மயிலு' நடிகையின் சம்பளத்தைத் தொட முடியாதாம். படத்திற்காக முப்பது நாட்களுக்கும் மேல் அவர் நடிப்பதற்குத் தேதிகளைக் கொடுத்திருக்கிறாராம்.
தமிழில் தற்போது முன்னணி நாயகிகளுக்கே ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதற்கு யோசிப்பவர்கள் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மயிலு' நடிகைக்கு இவ்வளவு சம்பளம் தருகிறார்களே என திரையுலகமே மூக்கிற்கும் மேல் விரலை வைத்து ஆச்சரியப்படுகிறதாம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பார்கள். இந்த விஷயத்தில் நாம் 'மயிலுக்கு வயசானாலும் மவுசு குறையாது' என புதுமொழியைச் சொல்லலாம்.