ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம் பொங்கலுக்கு வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், திரைப்படத்துறையிலும் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் ஐ படம் பொங்கலுக்கு வெளிவருமா என்ற சந்தேகம் நிலவுகிறது.
ஐ படத்தின் மீது பல கோடி ரூபாய் வங்கியில் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை செலுத்தினால்தான் ஐ படத்தை வெளியிட வங்கியிலிருந்து க்ளியரன்ஸ் கிடைக்கும் என்கிறார்கள். தயாரிப்பாளர் தரப்பிலோ ஐ படம் பொங்கலுக்கு உறுதி என்று சொல்லப்படுகிறது.
பொங்கலுக்கு முன்பே அதாவது ஜனவரி 9ஆம் தேதியே ஐ படத்தை உலகமெங்கும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதோடு, ஐ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை மதுரை அழகர் ஃபிலிம்ஸ் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்றும், கோவை ஏரியாவின் திரையரங்க வெளியீட்டு உரிமையை மட்டும் காஸ்மோ ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது என்றும் சொல்கிறார்கள். கௌதம் மேனன் இயக்கும் அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் படம் ஜனவரி 8ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.