ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட ஒரே கன்னடப்படம் "டிசம்பர் 1" அதன் இயக்குனர், பல தேசிய விருதுகள் பெற்றுள்ள பிரபல இயக்குனர் பி.சேஷாத்ரி, மீடியாவை சந்தித்து பேசினார்.
அவர் பேட்டியிலி்ருந்து...
** 24 ஆண்டுகளாக தொடர்ந்து நான் இந்திய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு ( பதினோறு ஆண்டுகளாக கோவாவில்) தவறாமல் வருகிறேன். திரைப்பட விழாக்களில், வியாபார பிரிவும் முக்கியமானது. கலாச்சார பரிவர்த்தனை தவிர, நமது சினிமாவிற்கு மார்க்கெட் கிடைக்கும் என்றும் நாம் வருகிறோம். இதுவரை நான் எட்டு படங்கள் எடுத்துள்ளேன்., அவற்றில் ஏழு படங்கள் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டுள்ளன. ஹோட்டல், விமான டிக்கெட் மட்டும் தான் எங்களுக்கு கிடைக்கிறது. வியாபாரரீதியில் வேறு எந்த பயனும் கிடைப்பதில்லை.
** திரைப்படவிழா, நேஷனல் பிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேசன் இரண்டுமே மத்திய அரசால் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்தியன் பனோராமாவில் திரையிடப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல படங்கள், என்.ஃஎப்.டி.சி.யின் பிலிம் பஜாரில் காண்பிக்கப்படுவதில்லை. இரண்டுமே அரசின் அங்கங்களாக இருந்தாலும், அவை இரணடும் இணைந்து செயல்படாமல் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. திரைப்பட பைனான்சியர்கள், தயாரிப்பாளர்கள், பட்ஙகளை வாங்கவரும் வெளியீட்டு நிறுவனங்கள் எல்லோருமே பிலிம் பஜாருக்கு தான் வருகிறார்கள். இந்தியன் பனோரமா பட்ஙகளை பிலிம் பஜாரிலும் திரையிட வேண்டும், அதனால் இந்திய திரைப்படத்துறைக்கு நன்மைகள் கிடைக்கும் என்று சென்ற ஆண்டே, நான் டைரக்ரேட் ஆப் பிலிம் ஃபெஸ்டிவல் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினேன். ஆனால், இன்றுவரை எதுவும் மாறவில்லை.
** எனக்கு மற்றொரு வருத்தமும் உண்டு ; இந்தியன் பனோரமாவிற்கு படங்களை செலக்ட் செய்வதிலும் சில குறைகள். நடுவர் குழுவின் முடிவை நான் கேள்வி கேட்க முடியாது என்றாலும், ஒன்று சொல்ல வேண்டும். எனது இரண்டு படங்கள், இந்தியன் பனோரமாவிற்கு அனுப்பப்பட்டன. ஒன்றை செலக்ட் செய்யவில்லை. நான் இரு மலையாளப் படங்களை இந்தியன் பனோரமாவில் பார்த்தேன். தேர்வு செய்யப்படாத எனது மற்றொரு கன்னடப்படம், அந்த படங்களுக்கு, கருத்து, டெக்னிக்குகள் மொத்த படம் என்று எந்த வகையிலும் குறைந்தது அல்ல ; இந்தியாவின் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அந்த படம் தேர்வாகியிருக்கிறது. கோவா திரைப்பட விழா, இந்தியன் பனோரமாவில் மட்டும் அது ஏன் செலக்ட் ஆகவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.
** இதே ஆண்டு இந்தியன் பனோரமாவில், செலக்ட் செய்யப்பட்ட படங்கள், பெரும்பாலும் ஜனரஞ்சமாக சினிமா வகையை சேர்ந்தது. பெஸ்டிவல் வகை சினிமா அல்ல.
** கடந்த மூன்று நாளில், நான் பத்து படங்களை இங்கு பார்த்துவிட்டேன். "நல்ல படம்" ஒன்றை இனிதான் பார்க்க வேண்டும். Yet to watch a good film.
** கோவா திரைப்பட விழாவிலிருந்து மகிழ்ச்சி இன்றியே திரும்பிச் செல்கிறேன். இவ்வாறு பி.சேஷாத்ரி பேசினார். அவர் படத்தில் கதாநாயகியாக நடித்த நிவேதிதா உடன் இருந்தார்.
கோவாவிலிருந்து எஸ்.ரஜத்..