ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
தெலுங்கு திரையுலகிற்கு எதிராக, தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் அமைப்பு, காலவரையற்ற வேலைநிறுத்தம் துவக்கியுள்ளனர். 24 துறைகளை சேர்ந்த தெலுங்கு சினிமா தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் கலந்து கொள்ளும் இப்போராட்டத்தில் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அனைத்து தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு சம்பள உயர்வு, சிறிய பட்ஜெட் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் என்ற பாரபட்சமின்றி அனைத்து படங்களுக்கும், ஒரேவிதமான சம்பளம், அனைத்து தெலுங்கு திரையுலக படங்கள் மற்றும் விழாக்களில் வெளிமாநில தொழிலாளர்களை பயன்படுத்தாமல், தெலுங்கு சினிமா தொழிலாளர்களையே பயன்படுத்த வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். தெலுங்கு சினிமா தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால், கோபாலா கோபாலா, கிக்-2, டெம்பர், ஜில் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் மிகுந்த பணநெருக்கடியை சந்தித்துள்ளன. தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் அமைப்பு, தெலுங்கு திரையுலகினரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை பற்றி கலந்துரையாட விரும்புகின்றனர்.