ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? |
பிரபல இந்தி மற்றும் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால்வர்மாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஸ்ரீபிரவின். ராம்கோபால் வர்மா தயாரிப்பில் காயம் 2 என்ற படத்தை தெலுங்கில் இயக்கினார். இதில் ஜெகபதி பாபு, விமலா ராமன் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். தற்போது தமிழ் படம் எடுக்கும் ஆசையில் போர்க்குதிரை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அதுபற்றி அவர் கூறியதாவது: நான் தெலுங்கு இயக்குனராக இருந்தாலும் தமிழ் சினிமா மீது எனக்கு ஆர்வம் இருந்தது. பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ் படங்களைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
இதனால் மதுரைக்கு வந்து ஒரு நண்பர் வீட்டில் தங்கி மதுரையை களமாக கொண்டு ஒரு கதை தயார் செய்தேன். நிறைய மதுரை படங்கள் வந்து விட்டதால் கதையை உசிலம்பட்டி பகுதிக்கு ஏற்றதாக மாற்றினேன். தயாரிப்பாளர் யாரும் கிடைக்காததால் நானே தயாரிப்பாளராகி விட்டேன். ஆடிசன் வைத்து ஹீரோ சைதன்ய கிருஷ்ணனையும், ஹீரோயின் சாந்தினியையும் தேர்வு செய்தேன்.