தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல இந்தி மற்றும் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால்வர்மாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஸ்ரீபிரவின். ராம்கோபால் வர்மா தயாரிப்பில் காயம் 2 என்ற படத்தை தெலுங்கில் இயக்கினார். இதில் ஜெகபதி பாபு, விமலா ராமன் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். தற்போது தமிழ் படம் எடுக்கும் ஆசையில் போர்க்குதிரை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அதுபற்றி அவர் கூறியதாவது: நான் தெலுங்கு இயக்குனராக இருந்தாலும் தமிழ் சினிமா மீது எனக்கு ஆர்வம் இருந்தது. பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ் படங்களைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
இதனால் மதுரைக்கு வந்து ஒரு நண்பர் வீட்டில் தங்கி மதுரையை களமாக கொண்டு ஒரு கதை தயார் செய்தேன். நிறைய மதுரை படங்கள் வந்து விட்டதால் கதையை உசிலம்பட்டி பகுதிக்கு ஏற்றதாக மாற்றினேன். தயாரிப்பாளர் யாரும் கிடைக்காததால் நானே தயாரிப்பாளராகி விட்டேன். ஆடிசன் வைத்து ஹீரோ சைதன்ய கிருஷ்ணனையும், ஹீரோயின் சாந்தினியையும் தேர்வு செய்தேன்.