தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலர் மேல் நிலைப்பள்ளி என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ஹாசிகா தத். பெங்களூர் நடிகையான இவர், ஆரம்பத்தில் கிளாமருக்கு கத்தரி வைத்தே கதைகள் கேட்டு வந்தார். ஆனால், நடித்து வெளியான படங்கள் வெற்றி பெறாததால் அவரது கண்டிஷன்களை யாருமே காது கொடுத்தே கேட்கவிலலை.
அதோடு, அவரை ராசியில்லாத நடிகை என்றும் ஓரங்கட்டியது கோடம்பாக்கம். இந்த நிலையில், ஒரு புதுமுக டைரக்டர் தன்னிடம் சொன்ன கதை பிடித்து விட்டதால், தயாரிப்பாளர் இல்லாமல் தடுமாறிய அவருக்கு தானே தயாரிப்பாளரையும் ரெடி பண்ணிக்கொடுத்து இப்போது ஒரு பந்து நான்கு ரன் ஒரு விக்கெட் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினியாக நடித்திருக்கிறார் ஹாசிகா தத்.
மேலும், ஆரம்பத்தில் தமிழே தெரியாமல் இருந்த ஹாசிகா, கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் முகாமிட்டதால் இப்போது நன்றாக தமிழ் பேசுகிறார். அதோடு, சமஸ்கிருத மொழியையும் அவர் சின்ன வயதில் இருந்தே பயின்று வந்துள்ளாராம். முக்கியமாக சமஸ்கிருத மொழியில் பாடல் பாடுவது என்றால் அவருக்கு அலாதி பிரியமாம்.