நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
கோவா திரைப்பட விழாவின் துவக்க நாளில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் அமிதாப் பச்சன், இந்த விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் விழாவுக்கு வந்தார். விழா முடிந்த அன்றைய இரவே மும்பைக்கு திரும்பிவிட்டார். வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. முன்னதாக விழாவில் அவர் பேசியது ஹைலைட்டாக இருந்தது. குறிப்பாக இந்திய சினிமாத்துறையின் வளர்ச்சியை ஆரம்பம் முதல் தற்போது வரை விரிவாக பேசினார். அவர் சொன்னதை ஒரு புத்தகமாகவே வெளியிடலாம். பல சமுதாய பிரச்னைகளை இந்திய சினிமா எப்படி அணுகியது என்று விவரித்தார்.
அவர் பேசுகையில், தீவிரவாதத்தை முதலில் தன் படத்தில் கையாண்டது இயக்குநர் மணிரத்னம் தான் (ரோஜா) என்று குறிப்பிட்டார். தியேட்டரில் நமக்கு அடுத்த சீட்டில் உட்கார்ந்து படம் பார்ப்பவர்கள் யார், அவர் என்ன ஜாதி, என்ன மதம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவரும், நாமும் படத்தில் வரும் காமெடியை ரசிக்கிறோம். உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் அழுகிறோம். மனிதர்களை மனித குலத்தில் இணைப்பது இந்த சினிமா தான். இந்த விசயத்தில் சினிமாவுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. மனிதர்களை இணைப்பதில் சினிமாவின் பங்கு பெரிதும் இருக்கிறது என்றார்.
துவக்க விழாவில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த்திற்கு இணையாக, சொல்லப்போனால் ரசிகர்களால் அதிக ஆரவாரம், கைதட்டல் பெற்றவர் மனோகர் பரிக்கர். கோவா முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சருமான மனோகர் பரிக்கர் ஒவ்வொரு முறை பேசும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் அவர் ''ஐ லவ் கோவா'' என்று கொங்கனியில் சொன்னபோது ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டும் அளவுக்கு எழும்பியது. பனாஜி நகரத்தில், மிராமர் என்ற கடற்கரையில் மனோகர் பரிக்கரின் பெரிய மணல் சிற்பம் உருவாக்கப்பட்டு நிறைய பார்வையாளர்கள் ரசிக்கிறார்கள்.