டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தப்படத்தில் வரும் டயலாக்குகளை மொத்தம் இரண்டே பக்கங்களின் எழுதி விடலாம். அவ்வளவு குறைவு, ஆனால் அது ஒரு குறையாக தெரியவில்லை.
நேபாளத்தில் ஒரு மலைப்பாங்கான கிராமத்தில் எடுக்கப்பட்ட கதை. எந்தபக்கம் திரும்பினாலும் இமயமலை தொடரின் சிகரங்களும், தெளிந்த நீரோடைகளுமாக தெரிகின்றன. 45 வயதாகும் கிம், கொரியாவில் கோரி அணு நிலையத்தில் உதவி முதன்மை அதிகாரியாக பணியாற்றுகிறார். விமானத்தில் காத்மண்டு வந்து நீண்டதூரம் காரில் பயணித்து வந்த அவரை, ஒரு ஷெர்பா அவரது லக்கேஜை தூக்கி முதலில் நடந்து போக கிம் கஷ்டப்பட்டு மலைபாதையில் நடந்து வருகிறார். அந்த அணு நிலையத்தில் பணி புரிந்த டோர்கி விபத்தில் இறந்து விடுகிறார்.
ஜார்கோர்ட் என்ற இடத்தில் உள்ள டோர்கியின் வீட்டுக்கு சென்று டோர்கி கொடுக்க சொன்னார் என்று பணத்தை கொடுக்கிறார். தன் கணவர் எப்படி இருக்கிறார் என்று கேட்கும்போது நன்றாக இருக்கிறார் என்றே சொல்லுகிறார். ஒரு சில நாட்கள் அங்கே தங்குகிறார். டோர்கியின் சிறு மகனுடன் நட்பாக இருக்கிறார். அந்த துயரமான செய்தியை அந்த குடும்பத்திடம் எப்படி சொல்கிறார் என்பதை படத்தில் கடைசி வரை காட்டவில்லை. டோர்க்கியின் சாம்பலை அவரது மனைவி, மலையிலிருந்து தெளிக்கிறார், அவரது படத்திற்கு மாலை போடப்பட்டிருக்கிறது. கிம் திரும்பி செல்ல கிளம்புகிறார்.
டிராபிக் சத்தம், புகை என எந்த ஒரு மாசும் இல்லாத மலை கிராமமாக இமயமலையின் அழகு மிளிர்கிறது.
- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -