மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? |
நான் ஈ படத்தின் வெற்றி காரணமாகவே கன்னட நடிகர் சுதீப்பை விஜய் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். சுதீப்புக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுதீப், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கும் விஜய் 58 படத்தின் வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஈசிஆரில் நடைபெறும் விஜய் 58 படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ள ஸ்ரீதேவி மற்றும் கன்னட சூப்பர்ஸ்டார் நான் ஈ புகழ் சுதீப் இருவரும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சுதீப், விஜய் 58 படத்தில் விஜய்க்கு சமமான வேடத்தில் நடிப்பதாக நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, சுமார் 10 வருடங்களுக்கு முன்பே விஜய்யை சந்தித்துள்ளதாகவும், அப்போதிலிருந்தே இருவரும் நண்பர்கள் என்றும் சொல்லி இருக்கிறார் சுதீப். அதாவது, 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த மதுர படத்தின் படப்பிடிப்புத்தளத்தில் விஜய்யும் சுதீப்பும் சந்தித்துக் கொண்டார்களாம்.
மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரக்ஷிதா, கன்னட படம் ஒன்றில் சுதீப்புக்கும் ஜோடியாக அப்போது நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த இரண்டு படங்களுக்குமான படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெற்றபோது, சுதீப்பை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ரக்ஷிதா. அப்போது சந்தித்துக் கொண்ட இருவரும், இரண்டு வருடங்கள் கழித்து பிரபுதேவா கொடுத்த பார்ட்டி ஒன்றிலும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். தற்போது விஜய் 58 படத்தின் படப்பிடிப்பில் விஜய், சுதீப் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாகிவிட்டனராம். அதன் காரணமாக, சமீபத்தில் சுதீப்பை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்திருக்கிறார் விஜய். அதனாலோ என்னவோ... விஜய்யை இனிமையானவர் என்றும், எளிமையானவர் என்றும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார் சுதீப்.