தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் புதிய படம் ஆயா வடை சுட்ட கதை. என்.பணீந்திரா இயக்குகிறார், எஸ்.பி.பாலாஜி ஒளிப்பதிவை கவனிக்கிறார், ஷமீர், சிவா இசை அமைக்கிறார்கள். அவிதேஜ், சுபுர்ணா ஹீரோ, ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள். "ஆயாவிடம் திருடிய வடையை நரியிடம் பாட்டுபாடி ஏமாந்த காக்கையின் கதை. பழைய ஆயா வடை சுட்ட கதை. இந்த கதையில் ஆயாவிலிருந்து நரி வரை எல்லோருமே புத்திசாலிகள்" என்கிறார் இயக்குனர் பணீந்திரா.
அவர் படத்தை பற்றி மேலும் கூறியதாவது: இது முழுக்க முழுக்க ஒரு அப்பார்ட்மெண்டில் நடக்கிற கதை. அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள் என்று அடுத்த வீட்டுக்காரனுக்குத் தெரியாது. ஆனால் எந்தெந்த வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று வாட்ச்மேன், தண்ணீர் கேன் சப்பளை செய்கிறவர். பால்போடுகிறவர், பேபப்பர் போடுகிறவர், வேலைக்காரிக்குத் தெரியும்.
சதி திட்டம் தீட்டுவதற்காக ஒரு சமூகவிரோத கும்பல் அப்பார்ட்மெண்டில் வீடு எடுத்து தங்குகிறது. பகலில் சகஜமாக எல்லோரிடமும் பழகும் அவர்கள் இரவில் சதி செயலுக்கு திட்டமிடுகிறார்கள். அந்த அப்பார்ட்மெண்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி இருக்கிறார். இந்த இருவரையும் புரிந்து கொண்ட ஒரு பேப்பர் போடும் இளைஞன் இருக்கிறான். இந்த மூவருக்குள்ளும் நடக்கும் முக்கோண ஏமாற்றுக் கதைதான் படம். ஒருவரை ஒருவர் ஏமாற்ற நினைக்கிறார்கள். இறுதியில் வென்றது யார் என்பதுதான் படத்தின் முடிவு என்கிறார் பணீந்திரா.