‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சினிமாவுக்கு ஆஸ்கர் மாதிரி இலக்கிய உலகிற்கு சாகித்ய அகாடமி விருது. ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி கவிதை திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரவழைக்கப்பட்டு கவிதை வாசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இது கவிஞர்களுக்கான பெரிய அங்கீகாரமாகும்.
இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 6ந் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடக்கும் சாகித்ய அகாடமியின் தெற்கு, வடகிழக்கு மாநில கவிதை விழாவில் கலந்து கொண்டு கவிதை வாசிக்க கவிஞர் கபிலன் வைரமுத்துவும், கவிஞர் ரவிசுப்பிரமணியமும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விழாவில் இதற்கு முன்பும் தமிழ் நாட்டின் முன்னணி கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு நா.முத்துகுமார் அழைக்கப்பட்டிருந்தார். இந்த ஆண்டு கபிலன் வைரமுத்து அழைக்கப்பட்டிருக்கிறார். வைரமுத்துவின் மகனும் வளர்ந்து வரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துதான் இதில் கலந்து கொள்ளும் வயது குறைவான இளம் கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.