டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பலபேரை கூட்டணி சேர்த்துக் கொண்டு படம் தயாரிப்பது இப்போது (க்ரவுட் பண்ட்) பேஷனாகி வருகிறது. தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் சங்கத்தினர் சுமார் 60 பேர் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு முயல் என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். அதேபோன்று தற்போது டிஸ்கவரி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் பொதுமக்களிடம் நிதி திரட்டி உச்சிமாகாளி என்ற படத்தை தயாரிக்கிறது. 100 பேர்களிடம் பணம் திரட்டி படத்தை தயாரிக்கிறார்கள். விரும்பம் உள்ளவர்கள் தயாரிப்பாளராகலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் ஏக்நாத் என்பவர் எழுதிய நாவலை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. அவரும், அறிவுமதியும் பாடல்களை எழுதுகிறார்கள். சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கவுசிக் இசை அமைக்கிறார். மு.வேடியப்பன் இயக்குகிறார். சட்டம் ஒரு இருட்டரை ரீமேக், தொட்டால் தொடரும் படங்களில் நடித்த தமன் குமார் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. திருநெல்வேலி பகுதியில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.