‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் போராடி ஜெயித்தவர்களில் அஜீத் குறிப்பிடத்தக்கவர். அவரையடுத்து சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி உள்பட சில நடிகர்களும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கின்றனர். இப்படி தனித்து போராடி ஜெயித்த இவர்கள் சினிமா விழாக்களுக்கு செல்லும்போது, அவர்களைப்பற்றி பெருமையாக பேசுவதாக கருதி சிலர், இவர்களெல்லாம் சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவர்கள் என்று முன்னுதாரணமாக சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால், இப்படி விஜயசேதுபதியைப்பற்றி யாராவது சொன்னால், கஷ்டப்பட்டு முன்னேறினார். உயிரைக்கொடுத்து நடித்தார் என்றெல்லாம் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார் அவர். காரணம், கஷ்டப்பட்டால்தான் எந்த துறையாக இருந்தாலும் ஜெயிக்க முடியும். அதோடு, வன்மம் படத்தில் நான் உயிரைக்கொடுத்து நடித்ததாக சொல்கிறார்கள்.
அந்த கதைக்கு எப்படி தேவைப்பட்டதோ அதற்காக ரிஸ்க் எடுத்து நடித்தேன். அது எனது கடமை. கஷ்டப்பட்டு நடித்தால்தான் வெற்றி என்கிற இலக்கை அடைய முடியும். அதனால் எதையுமே நான் கஷ்டமாக நான் நினைக்கவில்லை. நினைப்பதும் தவறு. அதனால், நான் கஷ்டப்பட்டு வளர்ந்ததாக, நடித்ததாக யாரும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார் விஜயசேதுபதி.