மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
துள்ளுவதோ இளமை ஷெரீனை தமிழ் ரசிகர்கள் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. முதல்படத்திலேயே நாயகன் தனுஷ் தன்னை கற்பழித்து விடுவது போன்று துணிச்சலாக நடித்தவர். இப்படியொரு இமேஜ் முதல் படத்திலேயே ஏற்பட்டு விட்டால் அதன்பிறகு சினிமாவில் பெரிதாக வளர முடியாது என்று சிலர் முட்டுக்கட்டைப்போட்டும் அந்த படத்தில் நடித்தார் ஷெரீன்.
அந்த படமும் வெற்றியாக அமைந்ததால், அதையடுத்து தமிழில் பேசப்படும் நடிகையாக சில ஆண்டுகள் திகழ்ந்தார். சிபிராஜ் அறிமுகமான ஸ்டுடன்ட் நம்பர்-1, பீமா, பூவா தலையா என நடித்தவர் பின்னர் படவாய்ப்பு இல்லாமல் கன்னடத்துக்கு சென்று விட்டார். இருப்பினும் அவ்வப்போது கோடம்பாக்தக்துக்க வந்து கல்லெறிந்து வந்த ஷெரீனுக்கு இப்போது திகில், நண்பேன்டா என்ற இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதில், திகில் படத்தில் ஒரு மிரட்டலான ரோலில் நடித்திருக்கிறாராம் ஷெரீன். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் நாயகன் அசோக் உள்பட அனைத்து டெக்னீசியன்களும் ஆஜராகியிருந்தனர். ஆனால், முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஷெரீன் மட்டும் ஆப்சென்டாகியிருந்தார்.