கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கோவாவில் நடந்து வரும் 45வது சர்வதே திரைப்பட விழாவில் குற்றம் கடிதல் என்றே ஒரே தமிழ் படம் மட்டுமே திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அங்கீகாரமாக கருதப்படும் சிவப்பு கம்பள வரவேற்பு இந்த படத்திற்கும் படத்தில் பணியாற்றியவர்களுக்கும் அளிக்கப்பட்டது.
இதற்காக இயக்குனர் பிரம்மா.ஜி, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கோவா சென்றனர். "கடந்த வருடம் நான் தயாரித்த தங்க மீன்கள் படத்திற்கு இப்படி ஒரு மரியாதை கிடைத்தது. இந்த ஆண்டு குற்றம் கடிதல் படத்திற்கு கிடைத்துள்ளது. வசூல் படங்களை விட நல்ல படங்களை தயாரிக்கும் உத்வேகத்தை இது கொடுக்கிறது. குற்றம் கடிதல் படத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வதற்காக பிரமாண்டமாக இதனை வெளியிட இருக்கிறேன்" என்றார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்.