தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோவாவில் நடந்து வரும் 45வது சர்வதே திரைப்பட விழாவில் குற்றம் கடிதல் என்றே ஒரே தமிழ் படம் மட்டுமே திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அங்கீகாரமாக கருதப்படும் சிவப்பு கம்பள வரவேற்பு இந்த படத்திற்கும் படத்தில் பணியாற்றியவர்களுக்கும் அளிக்கப்பட்டது.
இதற்காக இயக்குனர் பிரம்மா.ஜி, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கோவா சென்றனர். "கடந்த வருடம் நான் தயாரித்த தங்க மீன்கள் படத்திற்கு இப்படி ஒரு மரியாதை கிடைத்தது. இந்த ஆண்டு குற்றம் கடிதல் படத்திற்கு கிடைத்துள்ளது. வசூல் படங்களை விட நல்ல படங்களை தயாரிக்கும் உத்வேகத்தை இது கொடுக்கிறது. குற்றம் கடிதல் படத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வதற்காக பிரமாண்டமாக இதனை வெளியிட இருக்கிறேன்" என்றார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்.