பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், குறிப்பாக ரஜினி அரசியலுக்கு வருவார், எம்.பி, எம்.எல்.ஏ ஆகலாம், அமைச்சர் ஆகலாம் என்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல் அவரை மட்டுமே நேசித்து தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். இப்படி தன்னலம் கருதாத தீவிரமான ரசிகர்கள் இருப்பது உலகத்திலேயே ரஜினிக்கு மட்டும்தான். இது நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் இயக்குனர் ரிங்கு கல்சிங் என்பவரை கவர்ந்திருக்கிறது.
ரிங்கு, ஜோய்ஜித் என்பவருடன் இணைந்து பார் தி லப் ஆவ் எ மேன் என்ற பெயரில் ரஜினி ரசிகர்கள் பற்றிய ஆவணப் படம் ஒன்றை இயக்கி உள்ளார். ரஜினி ரசிகர்கள் எப்படி செயல்படுகிறார்கள், அவர்கள் ரஜினி மீது வைத்திருக்கும் அன்பு எப்படிப்பட்டது என்பதை அவர்களை நேரில் சந்ததித்து பேட்டியாகவும், அவரது நடத்தைகளை படமாகவும் எடுத்துள்ளார். குறிப்பாக ரஜினி உடல் நலம் பாதிக்கப்பட்டபோது அவருக்காக ரஜினி ரசிகர்கள் செய்த பிரார்த்தனைகள் அதிகமாக இந்த ஆவணப்படத்தில் இடம்பெறுகிறது. அதோடு தங்கள் பெயரோடு ரஜினி பெயரையும் இணைத்து கொண்டிருப்பவர்களையும் சந்தித்து பேசியுள்ளார்.
இதுபற்றி ரிங்கு கூறியதாவது: ரஜினியை அவரது ரசிகர்கள் எந்த கோணத்தில் பார்க்கிறார்கள் என்பதுதான் இந்த ஆவணப்படத்தின் நோக்கம். இதற்காக தமிழ் நாட்டில் 4 ஆண்டுகள் தங்கியிருந்து ரஜினி ரசிகர்களுடன் பழகி அவர்களது மனநிலையை அறிந்தேன். கடைசியில் நானும் அவரது ரசிகையாகிவிட்டேன். நான் இதுவரை ரஜினியை சந்தித்ததில்லை. இந்த ஆவணப் படம் முழுமை அடைந்ததும் அவருக்கு போட்டுக்காட்ட திட்டமிட்டிருக்கிறேன். என்கிறார் ரிங்கு.