தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தார். அடுத்து அவர் நடிக்கப் போகும் படம் அவருடைய 150வது படம் என்பதால் அந்தப் படத்தை எப்படியும் மாபெரும் வெற்றிப் படமாக ஆக்க வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் அனைவருமே படத்தின் கதையைக் கேட்டு வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் சிரஞ்சீவி பிறந்த நாளன்றே அவருடைய 150வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அவருடைய தீவிர ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இதுவரை பல இயக்குனர்களிடம் கதை கேட்டும் சிரஞ்சீவிக்குப் பொருத்தமான கதையாக அமையவில்லையாம். இதனால் படம் பற்றிய அறிவிப்பு இன்னும் தாமதமாகும் என்று சொல்கிறார்கள். எப்படியும் இந்த ஆண்டு கடைசிக்குள் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு விடலாம் என்று அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கிறார்களாம். ஆனால், இதுவரை எந்த கதையையும் முடிவு செய்யாமல் எப்படி அறிவிப்பது என்றும் தயங்குகிறார்களாம். அதனால், சிரஞ்சீவியின் 150வது படம் பற்றிய அறிவிப்பு அடுத்த ஆண்டுதான் வெளியாகும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கதைக்கே இப்படி என்றால் இன்னும் இசையமைப்பாளர், ஜோடி என எவ்வளவு நாட்கள் நீளுமோ என சிரஞ்சீவியின் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்டார்களாம்.