'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல், ரஜினி காலத்தில் அவர்கள் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். 99 படங்களில் நடித்த பிறகு தன் 100 ஆவது படமான ராஜபார்வை படத்தின் மூலம்தான் கமல் தயாரிப்பாளர் ஆனார். ரஜினியோ வள்ளி என்ற படத்தில்தான் தயாரிப்பாளர் ஆனார். இப்போது உள்ள கதாநாயகன்கள் ஒரு சில படங்களில் நடித்த நிலையிலேயே சொந்தப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர். கடந்த ஆண்டு சங்குதேவன் என்ற படத்தை சொந்தமாக தயாரிப்பதாக அறிவித்த விஜய்சேதுபதி, பின்னர் அந்தப்படத்தை ட்ராப் பண்ணினார். தற்போது ஆரஞ்சுமிட்டாய் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தைத் தயாரிக்கிறார்.
விஜய் சேதுபதியும், இளையராஜாவும் இந்தப் படத்தில் இணைகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலை படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கிறாரே தவிர இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இப்போது மெல்லிசை, புறம்போக்கு, இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய் என பல படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி, இப்படத்தை அடுத்து நானும் ரௌடிதான் என்ற படத்தில் நயன்தாரா உடன் நடிக்கிறார். தயாரிப்பு தனுஷ்.