'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
திருட்டுப்பயலே, சந்தோஷ் சுப்ரமணியம், மதராசப்பட்டினம், அவன் இவன், தெனாலிராமன், இரும்புக்குதிரை உள்பட பல படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது அனேகன், வை ராஜா வை, தனி ஒருவன் ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது. பெரும்பாலும் பிரமாண்ட பட்ஜெட் படங்களாக கொடுத்து வரும் இந்த நிறுவனத்துக்கு ஓரிரு படங்களை தவிர பல படங்கள் தோல்வி படங்களாகத்தான் அமைந்துள்ளன.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற அனேகன் படத்தில் ஆடியோ விழாவின்போது, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கல்பாத்தி அகோரம் நிறுவனத்தை பெருமையாக பேசினார். இந்த மாதிரி தயாரிப்பாளர்கள் கிடைப்பதே அரிது. ஆனால் அவரை சினிமாக்காரர்கள் சரியாக பயன்படுத்துவதில்லை. கதையை நல்லவிதமாக சொல்லி, படத்தை சொதப்பி விடுகிறார்கள் என்று அவர்களுக்கு தோல்வி படம் இயக்கிய சில டைரக்டர்களை குறி வைத்து பேசினார்.
ஆனால் இந்த சேதி வெளியே வந்தபோது, ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு தோல்வி படம் கொடுத்த இயக்குனர், ஆர்.வி.உதயகுமாரை கண்டபடி விமர்சித்து வருகிறார்களாம். குறிப்பாக, நல்ல தயாரிப்பாளரை சரியாக பயன்படுத்துங்கள் என்று எங்களுக்கு அட்வைஸ் செய்கிற ஆர்.வி.உதயகுமார் எதற்காக, நந்தவனதேரு, சுபாஷ், சின்ன ராமசாமி பெரிய ராமசாமி, கற்க கசடற என வரிசையாக 4 தோல்வி படங்களை கொடுத்தார். இவரது கதைகளையும் நம்பிதானே தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுத்திருப்பார்கள். எங்களுக்கு அட்வைஸ் செய்யும் இவரும் ஹிட் படமாக கொடுத்திருக்க வேண்டுமல்லவா என்று அவருக்கு பதிலடி கொடுக்கிறார்களாம்.