தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"ஃபோர்ஸ் ஆப் டெஸ்டினி" படத்தின் இயக்குனர் பால் காக்ஸ், மீடியாவை சந்தித்தபோது, தனக்கு ஏற்பட்ட நெருக்கடியான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
* புற்றுநோய்க்காக எனக்கு கல்லீரலில் மேஜர் ஆபரேசன் நடந்தது. பின்னர், மாற்று கல்லீரல் பொருத்தும் ஆபரேசன் நடந்தது. சாவின் விளிம்புக்கே நான் சென்றுவிட்டு, உயிருடன் திரும்பினேன். நான் ஓரளவு குணமடைந்ததும், எனக்கு ஏற்பட்ட கஷ்டமான அனுபவங்களையும், வேதனை பயணத்தையும், திரைப்படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் விளைவு தான் "ஃபோர்ஸ் ஆப் டெஸ்டினி" திரைப்படம்.
* நான் உடல்நலம் சரியாக இல்லாதபோது எனது நண்பர்கள், எனக்கு குட்மார்னிங், குட் ஈவினிங், குட்நைட் என்று சொல்லும்போது எல்லாம், எனக்கு எல்லாமே ஒன்றாகத் தான் இருந்தது. வித்தியாசம் தெரியவில்லை. திடீரென்று உடல்நிலையில் எனக்கு பல பிரச்னைகள் வந்தன. முதலில் கேன்சருக்காக ஒரு ஆபரேசன், பின்னர் மாற்று கல்லீரல் பொருத்த மற்றொரு ஆபரேசன். என் வாழ்வில் மிகவும் சோதனையான காலம். உடல் உறுப்புகளை தானம் செய்பவர் கிடைப்பாரா? என்ற படபடப்பு என்னை மிகவும் அப்செட் ஆக்கிய மற்றொரு விசயம். இருமுறை டாக்டர்கள் நான் பிழைப்பது கஷ்டம், இன்னும் சில நாட்கள் தான் என்று நேரக்கெடு வைத்துவிட்டார்கள். ஆனால் விதி வேறுமாதிரி நினைத்து இருந்திருக்கிறது.போலும், நான் உயிரோடு பிழைத்து இன்று உங்கள் முன்னால் பேசிக்கொண்டிருக்கிறேன்.
* ஆஸ்பத்திரியில் இருந்தபோது தான், எனது ஆஸ்பத்திரி நினைவுகளை கேன்சர் வார்டிலிருந்து கதைகள் / நினைவுகள் என்ற பெயரில் எழுதினேன். அந்த புத்தகத்திலிருந்த எனது அனுபவங்களை தான் படமாக்கினேன்.
* ஆஸ்பத்திரியில் இருந்தபோது நான் பிழைத்து வருவேன், மீண்டும் திரைப்படங்களை எடுப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. நான் மிகவும் சோர்வாகவும், வீக் ஆகவும், எனர்ஜி எல்லாம் வறண்ட நிலையில் தான் இருந்தேன். விதி என் உதவிக்கு வந்தது, புது வாழ்க்கை வாழ, இரண்டாம் சான்ஸ் கொடுத்தது.
* "விதியை நம்புகிறீர்களா? என்று கேட்ட போது, நான் கடவுளை நம்புகிறேன், ஆனால், மனிதன் உண்டாக்கிய கடவுளை கண்டிப்பாக நம்பவில்லை. பைபிள், குரான் போன்ற புனித புத்தகங்களில் குறிப்பிட்டவைகளை நான் நம்புகிறேன்" என்கிறார்.
* ஃபோர்ஸ் ஆப் டெஸ்டினியில் திடீரென்று தனக்கு கேன்சர் என்று அறிந்ததும், சிற்பக்கலைஞர் ராபர்ட் உடைந்து போகிறார். அந்த தகவல், அவரை பயப்பட வைக்கிறது. தனிமையை உணர வைக்கிறது. பின்னர் அவர் வாழ்க்கையில் மாயா வருகிறார். இந்திய நடிகைகள் சஹானா கோஸ்வாமி, சீமா பிஸ்வாஸ் உள்பட எனது எல்லா நடிகர்களும், டேவிட் வென்ஹாம், டெர்ரி நாரிஸ், ஜீகியா பிளேக், ஜாக்குலின் மெக்கன்ஸி சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தப்படம், உடல் உறுப்பு தானத்தையும், அதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. நமது சமுதாயத்திற்கு சினேகம் மறந்த சமுதாயத்திற்கு இது விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று பால் காக்ஸ் கூறினார்.
கோவாவிலிருந்து எஸ்.ரஜத்.