கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
வருடத்துக்கு 250 படங்கள் தயாராகின்றன. வாரத்துக்கு அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. எனவே மற்ற படங்களில் இருந்து தங்களின் படங்களை மக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல படாதபாடு படுகின்றனர். விஜய் நடித்த, திருப்பாச்சி, சிவகாசி மற்றம் அஜித் நடித்த திருப்பதி உட்பட பல படங்களை இயக்கிய பேரரசு தற்போது இயக்கியுள்ள படம் திகார். இப்படம் தொடங்கப்பட்டு வருடக்கணக்காகிறது. ஃபர்ஸ்ட் காப்பியும் தயாராகி பல மாதங்களாகின்றன.
மலையாளத்தில் மம்முட்டி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற சாம்ராஜ்யம் படத்தின் டப்பிங்தான் படம் - திகார் படம். கூடுதலாக தமிழ் நடிகர்கள் சிலரை வைத்து சில காட்சிகளை எடுத்து படத்தில் சேர்த்து புதிய திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான் உன்னி முகுந்தன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் பார்த்திபன், மனோஜ் கே.ஜெயன், ரியாஸ்கான் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் இந்திய அளவில் பிரபலமான உயர் போலீஸ் அதிகாரியாக விளங்கி ஒய்வுபெற்ற கிரண்பேடி கலந்து கொள்கிறார். திகார் படத்தின் இசையையும் வெளியிட உள்ளார்.
திகார் படத்துக்கும் கிரண்பேடிக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? போலீஸ் அதிகாரியாக இருந்த போது, பல வருடங்கள் திகார் ஜெயில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார் கிரண்பேடி. கிரண்பேடி வெளியிடும் திகார் பட இசையை இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தியாகச் செம்மல் வா.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாரிசு சி.வா.சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார்.