துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
கடல் படத்தின் தோல்விக்குப் பிறகு சற்றே துவண்டு போன மணிரத்னம் பிறகு சுதாரித்துக்கொண்டு தன் புதுப்படத்தைத் தொடங்கினார். துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் படத்துக்கு அதிகாரபூர்வமாக இதுவரை தலைப்பு அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் ஓகே கண்மணி என்ற தலைப்பு சூட்டப்பட உள்ளதாக மணிரத்னம் தரப்பு தகவல் கூறுகிறது. ஆரவாரம் இல்லாமல் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மாதவன், ஷாலினி நடித்த அலைபாயுதே படப் பாணியில் இப்படமும், காதல் ரசம் சொட்டும் ரொமான்டிக் காதல் கதையாம்!
கடல்படத்தில் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுத்தால்தான் ஓகே கண்மணி படத்தை பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் செய்ய முடியும். எனவே இந்தப் படத்தை அதிகம் செலவு செய்யாமல், குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். அதை அவர் செயலிலும் காட்டியுள்ளார். வழக்கமாக மணிரத்னம் இயக்கும் படம் என்றால் அதற்கு நிறைய மாதங்கள் எடுத்துக் கொள்வார். ஆனால் இப்படத்தை மணிரத்னம் படு வேகமாகவே எடுத்திருக்கிறாராம்.
சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு நடந்துள்ளது. துல்கர் சல்மான், நித்யா மேனன் உடன் கனிகா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். மணிரத்னம் தயாரித்த ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர்தான் கனிகா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.