ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் என காதல் சென்டிமெண்ட் படங்களின் மூலம் புகழ்பெற்றவர் எழில். 5 வருட இடைவெளிக்கு பிறகு இப்போது மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா என காமெடி டிராக்கிற்கு மாறிவிட்டார். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிப்பில் அவர் இயக்கி வரும் வெள்ளக்காரதுரையும் காமெடி படம்தான்.
கவிதை மாதிரி காதல் படம் எடுத்துவிட்டு இப்படி திடீரென காமெடிக்கு மாறிட்டீங்களே?
நான் மாறலை, காலம் மாத்திடுச்சி. சினிமாவை தவிர வேறெந்த தொழிலும் தெரியாது. கடைசியா, தீபாவளி படம் கொடுத்தேன். அது ஹிட்டாகியும் அடுத்து படம் கிடைக்கல. சினிமாவிலும் புதியவர்கள் வரவால் நிறைய மாற்றம் நடந்துச்சு. அதை கவனிச்சிக்கிட்டே இருந்தேன். திடீர்னு காமெடி டிரெண்டு உருவாச்சு. அட... இது சுலபமான வேலையாச்சேன்னு நானே தயாரிப்பாளரா மாறி நண்பர்கள் சிலரையும் சேர்த்துக்கிட்டு மனம் கொத்தி பறவை எடுத்தேன். ஜனங்க ரசிச்சாங்க. அதே பாணியில தேசிங்கு ராஜா எடுத்தேன். அதுவும் நல்லா போச்சு. இப்போ வெள்ளக்காரதுரை. எனவே நான் மாறல. ஜனங்களோட ரசனை என்னை மாத்திடுச்சு. மக்களுக்கு என்ன பிடிக்குதோ அதை கொடுக்குறதுதானே ஒரு இயக்குனரோட கடமை.
வெள்ளைக்காரதுரை டைட்டிலுக்கு விளக்கம் சொல்லுங்க-?
எந்த வேலையும் செய்யாம வெள்ளையும் சொள்ளையுமா திரியுற பசங்கள கிராமத்து பக்கம் வெள்ளக்காரதுரைன்னு நக்கலா சொல்லுவாங்க. என் ஹீரோ விக்ரம் பிரபுவும் அப்படித்தான். அவரை அப்படித்தான் கூப்பிடுவாங்க. அதுதான் அந்த டைட்டில்.
கதை என்ன?
விக்ரம்பிரபுவும், அவரோட பிரண்ட் சூரியும் சின்னதா ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிக்கிறாங்க. அதுல பெரிய ஆளா வரணுங்றதுதான் அவங்களோட ஆசை. ஒரு இடத்தை குறைஞ்ச விலைக்கு வாங்கி அதை பிளாட் போட்டு விக்கலாமுன்ன முடிவு பண்றாங்க. அவிங்களுக்கு சுடுகாட்ட வித்து ஏமாத்திப்புடுறான் வில்லன். நியாயம் கேக்கபோன இடத்துல ஒரு சிக்கல்ல மாட்டிக்கிறாங்க. அதே மாதிரி ஸ்ரீதிவ்யாவும் ஒரு சிக்கல்ல மாட்டி இவங்களோடு வந்து சேர்றாங்க. மூணு பேரும் சேர்ந்து எப்படி சிக்கல்கள்லேருந்து வெளியில வர்றாங்கங்கறதுதான் கதை.
ஆட வச்சிருக்கேன். கவர்ச்சியா ஆட வைக்கல. அது ஒரு வியாபார தந்திரம்தான். இப்பல்லாம் சினிமால எல்லா அம்சத்தையும் எதிர்பார்க்குறாங்க. ஒரு குத்துப்பாட்டு இருந்தா நல்லா இருக்குமேன்னுதான் மீனாட்சியை ஆட வச்சிருக்கோம்.
எனக்கு கம்ஃபர்ட்டபிளான ஒரு காமெடியன். காமெடி ஸ்கிரிப்ட் எழுதும்போதே அவரை மனசுல வச்சிக்கிட்டுதான் எழுதுறேன். என்னோட படமும் நேட்டிவிட்டி படம்றதால அவர்தான் என்னோட சாய்சா இருக்கார்.
விக்ரம் பிரபு காமெடிக்கு ஒர்க்அவுட் ஆகியிருக்காரா?
இதுக்கு முந்தைய படங்கள்ல அவர் பெருசா காமெடி பண்ணினதில்லேன்னு நினைக்கிறேன். இதுல டாப் டூ பாட்டம் அவரோட காமெடிதான். இதுவரை பார்க்காத ஒரு விக்ரம் பிரபுவை இதுல பார்க்கலாம். அவரோட இன்னொரு பரிமாணத்தை இந்தப் படம் காட்டும்.
காமெடி படம்னாலும் அதுல ஒரு மெசேஜ் இருக்கணுமே?
இந்தப் படத்துலேயும் நல்ல மெசேஜ் இருக்கு. சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்பதுதான் நடுத்தர மக்களோட ஒரே ஆசை. அந்த ஆசையை பயன்படுத்திக்கிட்டு ஒரு கூட்டம் அவர்களை ஏமாற்றிக்கிட்டிருக்கு அவர்களிடம் ஜாக்கிரதையா இருங்கன்னு எச்சரிக்கிற மாதிரிதான் இந்த படத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கு.
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் மாதிரி படங்களை இனி உங்களிடம் எதிர்பார்க்க முடியாதா?