அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
முன்பை விட பல மடங்கு பெருகிவிட்ட திருட்டு விசிடியை ஓழிக்க, திரையுலகினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். விஷால், பார்த்திபன் போன்றவர்கள் நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள். திரையுலகம் சார்பில் வருகிற டிசம்பர் 2ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் நளினி ஆகியோர், மாநில குற்றப்பிரிவு டி.ஜி.பி அசுதோஷ் சுக்லாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் திருட்டு விசிடிய ஒழிக்க 6 வழிகளை சொல்லி உள்ளனர்.
அது வருமாறு...
1. திருட்டு விசிடியை ஒழிக்க, 2011ம் ஆண்டு கொண்டு வந்த குண்டர் சட்டத்தின்படி, தொடர்ந்து இந்த தொழில் ஈடுபடுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. திருட்டு விசிடிக்கான மாஸ்டர் காப்பி ஏதோ ஒரு திரையரங்கில் எடுக்கப்படுகிறது. அந்த திரையரங்கின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.
3. அனைத்து சிடி கடைகளிலும் திருட்டு விசிடி விற்கப்படுகிறது. அந்தந்த பகுதி போலீசார் இதனை தீவிரமாக கண்காணித்து, சோதனை செய்து தடுக்க வேண்டும்.
4. புதிய படங்களை ஒளிபரப்பும் கேபிள் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
5. புதிய படங்களை திரையிடும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.
6. காய்கறி விற்பதைப்போல சாலை ஓரங்களில் பஸ், ரெயில் நிலையங்களில் சிடி விற்பவர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.