இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜீவா, துளசி நடித்து கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த திரைப்படம் 'யான்'. இப்படத்தை இயக்கிய ரவி கே. சந்திரனுக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் தற்போது மோதல் எழுந்துள்ளது. இருவரும் மாறி மாறி பேட்டி கொடுத்து ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதில் தயாரிப்பாளரின் நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியது. 'யான்' படம் என்னுடைய சொந்தக் கதை என படத்திற்கான ஒப்பந்தம் போடும் போதே இயக்குனர் ரவி கே. சந்திரன் தெரிவித்திருக்கிறாராம். படம் வெளியான பின்தான் அது 1978ம் ஆண்டு வெளிவந்த 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்பது தயாரிப்பாளருக்குத் தெரிய வந்திருக்கிறது.
படம் வெளியாகி படுதோல்வியடைந்து தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாம். அதைத் தொடர்ந்து இயக்குனர் ரவி கே.சந்திரனை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லையாம். அதனால் தற்போது அவர் மீது ஏன் வழக்குத் தொடுக்கக் கூடாது எனக் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக தமிழ்த் திரையுலகில் மிகப் பெரும் கலைஞர்களே இப்படிப்பட்ட 'கதை காப்பி' விவகாரங்களில் சிக்குவது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்திய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளராகக் கருதப்படும் ரவி கே.சந்திரன் இயக்குனராக அறிமுகமான 'யான்' படத்தின் கதை காப்பியடிக்கப்பட்டது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனெவே இப்படி சில படங்கள் காப்பியடிக்கப்பட்டதால் தயாரிப்பாளர்களுக்கும், சில இயக்குனர்களுக்கும் இடையே மோதல்கள் எழுந்த சம்பவமும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'யான்' விவகாரம் நீதிமன்றம் வரை செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.