ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில், ஒருவர் மீது இருவர் சாய்ந்து, பனிவிழும் மலர்வனம், சங்கராபுரம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் சானியதாரா. தற்போது ஜிகினா உள்பட இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தான் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறாத நிலையில், மூன்றாம் தட்டு ஹீரோக்களின் படங்களாக நடித்துக்கொண்டிருந்தால் முன்னணி நடிகையாக முடியாது என்று நினைத்த சானியதாரா, சில பெரிய பட வாய்ப்புகளை கைப்பற்ற திரைக்குப்பின்னால் தீவிரம் காட்டி வந்தார். ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை.
அதனால், தனது தாய்மொழியான தெலுங்கு சினிமாவில் நடிக்க இங்கிருந்தபடியே கல்லெறிந்து வந்த சானியதாராவுக்கு தற்போது ஒரு தெலுங்குப்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இந்த வாய்ப்புக்காக பல மாதங்களாக போராடி வந்த அவர், ஆந்திராவுக்கு ஓடோடிச்சென்று அந்த படத்தில் கமிட்டாகிவிட்டவர், போட்டோ செஷனிலும் கலந்து கொண்டாராம்.