Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லிங்கா படத்திற்கு தடை கோரிய வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்

25 நவ, 2014 - 06:58 IST
எழுத்தின் அளவு:

லிங்கா படத்திற்கு தடை கோரிய வழக்கில், தீர்ப்பை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை ரவி ரத்தினம் தாக்கல் செய்த மனு: முல்லைவனம் 999 படம் மூலம் இயக்குனரானேன். இக்கதை முல்லைப் பெரியாறு அணை, அதை கட்டிய பொறியாளர் பென்னிகுவிக் வரலாற்றை கருவாகக் கொண்டது. அக்கதையை யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். முல்லைவனம் 999 கதையை திருடி, லிங்கா படம் தயாரித்துள்ளனர். இதை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வினியோகம் செய்ய உள்ளார். வழக்குப் பதிவு செய்யக்கோரி மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். லிங்கா படம் வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த், மனுதாரர் உள்நோக்குடன் மனு தாக்கல் செய்துள்ளார். குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை. படத்தில் நடித்துள்ளதைத் தவிர எனக்கு வேறு சம்பந்தமில்லை. எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் விளம்பர நோக்கில் மனுதாரர் வழக்கு தாக்கல் செய்துள்ளார், என பதில் மனு தாக்கல் செய்தார். இதுபோல் கே.எஸ்.ரவிக்குமார், கதாசிரியர் பொன்குமரன் பதில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் ரவிரத்தினம் கூடுதல் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எம்.வேணுகோபால் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார், ரஜினிகாந்த் சார்பில் வக்கீல் சஞ்சய் ராமசாமி ஆஜராகினர்.

மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் பதில் மனு: மனுதாரர் கோரியுள்ள நிவாரணத்தை அளிக்கும் அதிகாரம் போலீஸ் எல்லைக்குட்பட்டதல்ல. மனுதாரர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (ஐ.டி.,) மற்றும் இந்திய தண்டனைச் சட்டப்படி புகார் அளித்துள்ளார். ஐ.டி.,சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய முடியாது. முல்லைவனம் 999 படத்திற்கு பூஜை போட்டிருந்தாலும், படப்பிடிப்பு துவங்கவில்லை. மனுதாரர் அவரது கதை என்ன என்பதை குறிப்பிடவில்லை. பொன்குமரனும் தனது கதை என்ன என்பதை தெரிவிக்கவில்லை. இச்சூழ்நிலையில் கதை திருட்டு நடந்துள்ளதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்? புகாரில் முகாந்திரம் இல்லை. இவ்வாறு குறிப்பிட்டார். உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சாமிநாதன்,"இம்மனு நிலைக்கத்தக்கதல்ல,” என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன்," இருதரப்பிலும் தேவையான ஆவணங்களை தர மறுக்கின்றனர். போலீசார் எப்படி விசாரணையை முடிக்க முடியும்?” என்றார். நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in